என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் 2025"
- இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று.
- இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஜோஸ் பட்லர், ரபடா, முகமது சிராஜ் வருகையால் அந்த அணி மேலும் வலுவடைந்துள்ளது. சமீபகாலமாக இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஜொலிக்காத ஜோஸ் பட்லர், ஐ.பி.எல். மூலம் இழந்த பார்மை மீட்கும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் பேட்டிங் தூண்களாக உள்ளனர். ரஷித்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று. இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுத்தந்த ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26¾ கோடிக்கு எடுத்து அவரையே கேப்டனாக்கி இருக்கிறார்கள். அவரது வருகை பஞ்சாப் அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பேட்டிங்கில் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் பஞ்சாப்பும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்னில் சுருண்ட குஜராத், சென்னைக்கு எதிராக 231 ரன்கள் திரட்டி ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சென்ற ஆண்டு இங்குநடந்த 8 ஆட்டங்களில் 6-ல் 2-வது பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித்கான், சாய் கிஷோர், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், நேஹல் வதேரா அல்லது பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இறுதியில் லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 210 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் மெக்கர்க் 1 ரன்களும், சமீர் ரிஸ்வி 4 ரன்களும், அக்சர் படேல் 22 ரன்களும், டு பிளெசிஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களில் வெறியேறினார். அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இறுதியில் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
- நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.
மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- அக்சர் படேல் தலைமையில் டெல்லி அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.
- லக்னோ அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் இடம் பெறவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனால் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி விவரம்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
- 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது.
- சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகளை விக்னேஷ் வீழ்த்தினார்.
- SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக மும்பை அணி நிர்வாகம் சேர்த்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்த போட்டியில், மும்பை அணியின் இடதுகை பந்து வீச்சாளராக பிற்பாதியில் மட்டும் (மாற்று வீரர்) களம் இறங்கிய விக்னேஷ் புத்தூர் துருதுருவென மைதானத்தில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 23 வயதே ஆன இவர், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
U-14 மற்றும் U-19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடியுள்ள அவரின் திறமையை கண்ட மும்பை அணி நிர்வாகம், SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக சேர்த்தது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்தவர் விக்னேஷ் புத்தூர். 23 வயதே ஆன அவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். வரை முன்னேறி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளார்.
தற்போது பெரிந்தல்மண்ணாவில் உள்ள பி.டி.எம். அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ டிரைவர். தாயார் கே.பி.பிந்து வீட்டு வேலை செய்பவர். குடும்பத்தை வறுமை வாட்டியபோதும், விக்னேஷ் புத்தூரின் கிரிக்கெட் கனவுக்கு பெற்றோர் தடைபோடவில்லை.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் ஏலம் நடந்த அன்று, விக்னேஷ் வீட்டில் இருந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சரியத்தில் துள்ளிக்குதித்தார். ஐ.பி.எல். கனவு பலித்துவிட்டதை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.
"ரோஹித்தும், ஹார்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர்கள். இந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்" என்று அவர் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.
முதலில், விக்னேஷ் புத்தூர் கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளே வீழ்த்தினாலும், ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த விக்னேஷ் புத்தூரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், டெல்லி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
கடந்த சீசனில் 6-வது இடம் பெற்ற டெல்லி அணி புதிய கேப்டன் அக்ஷர் பட்டேல் தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிவரும், முந்தைய சீசனில் கேப்டனாக இருந்தவருமான ரிஷப் பண்ட் வெளியேறியதால் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கேப்டன் அவதாரம் எடுத்துள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் அணியில் புதிதாக ஐக்கியமாகி இருக்கிறார்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பாப் டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மெக்குர்க், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், குல்தீப் யாதவும், ஆல்-ரவுண்டராக அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.
லக்னோ அணியால் அதிகபட்ச தொகையாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியை வழிநடத்துகிறார். அந்த அணியில் பேட்டிங்கில் ரிஷப் பண்ட், மார்க்ரம், டேவிட் மில்லர், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஷமார் ஜோசப், ரவி பிஷ்னோய், ராஜ்வர்தர் ஹங்கர்கேகர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனம் கண்டுள்ளது வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. காயத்தால் அவதிப்பட்டு வந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் போட்டி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது வருகை அணிக்கு பலம் சேர்க்கும்.
புதிய கேப்டன்களுடன் களம் காணும் இரு அணிகளும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், டெல்லி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.
- ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
- இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி
நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.
அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
- நடப்பு சீசனின் முதல் போட்டியிலேயே ஐதராபாத் 286 ரன்கள் குவித்துள்ளது.
- ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 286 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.
அதற்கு அந்த அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஹெட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்களையடுத்து இந்த சீசனில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். அவரையடுத்து நிதிஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் 300 ரன்களை எடுப்பது வெகு தூரம் இல்லை.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை எட்டும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம்.
யாருக்குத் தெரியும், அது நடப்பதைப் பார்க்க நான் கூட அங்கே இருக்கலாம் என கூறியுள்ளார்.
ஏப்.17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றனர்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது.
- இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் வம்பிழுத்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை தீபக் சாஹர் சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 7 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த முறை மும்பை அணியில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, அவர் அருகில் சென்று எதோ கிண்டல் செய்யும் விதமாக பேசினார். ஆனால் தோனி அதை கண்டுகொள்ளாமல் பேட்டிங் செய்வார். போட்டி முடிந்து செல்லும் தோனியிடம் தீபக் சஹார் சிக்கினார். அப்போது தோனி அவரை விளையாட்டுத்தனமாக மட்டையால் அடிக்க முயற்சி செய்வார். அதில் இருந்து தீபக் சாஹர் தப்பித்து விடுவார். அதனை சிரித்தப்படியே தோனி கடந்து செல்வார்.
தோனி மட்டுமல்லாமல் ஜடேஜாவையும் தீபர் சாஹர் கிண்டலடிப்பார். அப்போது ஜடேஜா பேட்டால் அவரை தாக்குவதுபோல் பாவலா காட்டுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.