என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2025"

    • கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக அந்த்ரே ரஸல் விளையாடினார்.
    • அந்த்ரே ரஸலை கொல்கத்தா அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

    கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.

    இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.

    2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

    • தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • தோனி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

    அவர் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மனைவி சாக்ஷி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தோனி கேக் கொடுக்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நம் தலைவன் தலைவிக்கு பிறந்தநாள் விசில்கள் என தலைப்பிட்டுள்ளது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.

    அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் நேற்று வெளியிட்டது.

    சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.

    இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஆண்ட்ரே ரசலை சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கேகேஆர் இருக்கும்.. எனக்கு தெரிந்து கேமரூன் கிரீன் சிஎஸ்கேவை விட கேகேஆர் அணிக்கு தான் தேவையான வீரராக இருப்பார். அதனால் கிரீனின் விலையை சிஎஸ்கே அணி ஏற்றிவிடவேண்டும், அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரசலுக்கு முழுவீச்சில் செல்லமுடியும்.. சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸால் பவுலிங் மற்றும் சிறந்த ஃபினிசிங் போன்றவற்றிற்கு ரஸ்ஸல் சிறந்த தேர்வாக இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும் வைத்துள்ளன.
    • குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.

    அந்த வகையில் 10 அணிகளும் ரிலீஸ் செய்த வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டி காக், மொயீன் அலி, அன்ரிச் நோர்ஜே, வெங்கடேஷ் அய்யர் (23.75 கோடி ரூபாய்), அந்த்ரே ரஸல் (12 கோடி ரூபாய்) ஆகியோரை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் கொல்கத்தா கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும்.

    மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், ஆர்.சி.பி. 16.40 கோடி ரூபாயும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25.50 கோடி ரூபாயும், குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 21.80 கோடி ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் 11.50 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

    • அந்த்ரே ரஸல், வெங்கடேஷ் அய்யரை விடுவித்துள்ளது.
    • கைவசம் 64.3 கோடி ரூபாய் வைத்துள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 வீரர்களை வெளியிட்டுள்ளது.

    கொல்கத்தா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அந்த்ரே ரஸலை விடுவித்துள்ளது. அதேபோல் அதிக தொகைக்கு வாங்கிய வெங்கடேஷ் அய்யரையும் விடுவித்துள்ளது.

    அத்துடன் லவ்னித் சிசோடியா, டி காக், அன்ரிச் நோர்ட்ஜே, ரஹ்மதுல்லா குர்பாஸ், மொயீன் அலி, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சக்காரியா ஆகியோரை நீக்கியுள்ளது. தற்போது தன்வசம் 64.3 கோடி ரூபாயை வைத்துள்ளது. இந்த தொகையுடன் மினி ஏலத்தில் செல்ல இருக்கிறது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற இருப்பது உறுதியானது.
    • சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர்

    கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் - ஜடேஜாவை வர்த்தகம் செய்துகொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர், ஆனால், நேரடி வர்த்தகத்திற்கு பதிலாக ஜடேஜாவுடன், டெவால்ட் ப்ரேவிஸையும் சேர்த்து ராஜஸ்தான் அணி கேட்பதால் அதனை ஏற்க சிஎஸ்கே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    • ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் எனத் தகவல்.
    • அதற்கு முன்னதாக வருகிற 15-ந்தேதி தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை அணிகள் வெளியிட உள்ளது.

    ஐபிஎல் டி20 லீக்கின் ஒவ்வொரு சீசனுக்கும் முன்னதாக மினி ஏலம் நடைபெறும். அதற்கு முன்னதாக மெகா ஏலம், மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் தக்கவைத்துக் கொள்ள விரும்பாத வீரர்களை வெளியேற்றலாம்.

    கடந்த முறை அந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்ததோ?, அந்த தொகை அணியின் மொத்த தொகையில் இருப்பு வைக்கப்படும். அந்த தொகையை வைத்து மினி ஏலத்தில் வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.

    கடந்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற்றது. இதில் பல வீரர்களை கோடிக்கணக்கில் அணிகள் போட்டி போட்டு எடுத்தன. ஆனால், 2025 சீசனில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.

    சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லி அணி சில முக்கிய வீரர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    சிஎஸ்கே அணி அஸ்வினை வெளியிட இருப்பதாக தகவல் கசிந்தது. இதற்கிடையே அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில்தான் வருகிற 15-ந்தேதி எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன என்ற பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 15-ந்தேதி மும்பையில் மினி ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கவில்லை.

    • ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • ஐ.பி.எல். அணிகளை பொறுத்தவரை மதிப்பில் ஆர்.சி.பி. முதல் இடத்தில் உள்ளது.
    • அதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகில் அதிக அளவில் வருவாயை ஈட்டி தரும் போட்டிகளில் ஒன்றாக ஐ.பி.எல். இருக்கிறது. இதனால் அதன் மதிப்பு உச்சத்துக்கு சென்றது.

    இந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஐ.பி.எல்.லின் மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை சந்தித்து உள்ளது.

    2023-ல் ரூ.92,500 கோடியில் இருந்த ஐ.பி.எல். மதிப்பீடு 2024-ல் ரூ.82,700 கோடியாகவும், இந்த ஆண்டில் ரூ.76,100 கோடியாகவும் சரிந்து உள்ளது. 2025-ம் ஆண்டில் ஒட்டு மொத்த மதிப்பு 8 சதவீதம் குறைந்து உள்ளது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் மதிப்பு பெரும்பாலும் மாறாமல் நிலையானதாக இருக்கும் என்று ஆய்வு குழு தெரிவித்து உள்ளது. ஒளிபரப்பு உரிமம், விளம்பரதாரர்கள் உள்ளிட்டவற்றால் இந்த சரிவு காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஐ.பி.எல். அணிகளை பொறுத்தவரை மதிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

    இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    சமூக வலைதளங்களில் பிரபலமான அணியாக திகழும் ஆர்சிபி அணியை வாங்க இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் போட்டி போட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார். 

    ×