என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2026"

    • ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
    • மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.

    ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
    • கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடருக்கு பதிலாக பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வருவிருக்கும் மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவருமான ஃபாப் டு பிளெசிஸுக்கு இப்போது வயது 41.

    கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் தொடரில் 2024-ம் ஆண்டு கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
    • ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி வர்த்தக பரிமாற்றம், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் சமர்பித்துள்ளனர்.

    இந்நிலையில் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2026-க்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக கார்ல் குரோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நியமித்துள்ளது.

    இவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பயிற்சியாளர் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    • மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
    • சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த டிரேட் முறையில் பல அணிகளில் நிறைய வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும் மாற்றப்பட்டது ஆகும். மேலும் பல அணிகள் சில வீரர்களை கழற்றி விட்டும் தக்கவைத்தும் உள்ளது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார். மும்பை அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே பயிற்சியாளராக உள்ளார். பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

    மற்ற அணிகள் பொறுத்தவரையில் ஆர்சிபி அணிக்கு ஆண்டி பிளெவர், குஜராத் அணிக்கு ரெஹ்ரா, கொல்கத்தா அணிக்கு அபிஷேக் நாயர், டெல்லி அணிக்கு பதானி, லக்னோ அணிக்கு ஜஸ்டின் லாங்கர், ஐதராபாத் அணிக்கு டேனியல் விக்டோரி, ராஜ்ஸ்தான் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
    • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சி.எஸ்.கே. அணி எடிட் செய்துள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.
    • 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    மேலும், ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு மன்மதனே வாராய்' பாடலுடன் சஞ்சு சாம்சனின் வீடியோவை பகிர்ந்த அவரது மனைவி சாருலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
    • சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

    முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. இந்த நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. இதனை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது அதன்படி 'பிகில்' படத்தில் விஜய்யின் இன்ட்ரோ ஸ்டைலில் ஜடேஜா அந்த வீடியோவில் வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

    • நிதிஷ் ராணா கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு விளையாடினார்.
    • அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த சீசன் மும்பை அணிக்காக விளையாடினார்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி கொல்கத்தா அணியில் இருந்து நிதிஷ் ராணா டெல்லி அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜூன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே இணைந்துள்ளார்.

    • சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
    • ஜடேஜா, சாம் கரன் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

    அந்த வகையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த சஞ்சு சந்தோசத்தில் குதிப்பார். உடனே அவரது ஜெர்சியில் மஞ்சள் நிறமாக மாறும். இவ்வாறு அந்த AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×