என் மலர்
நீங்கள் தேடியது "Chinnaswamy Stadium"
- கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நேற்று (பிப்.12) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வென்றதையடுத்து, ஜுன் மாதம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீதிபதி டி'குன்ஹா அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முழு கொள்ளளவையும் பயன்படுத்தாமல், அதிகபட்சமாக 30,000 முதல் 35,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மைதானத்தின் நுழைவு வாயில்களை அகலப்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த AI கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்துதல் போன்ற மேம்பாடுகளைச் செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறைப்படி நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான இதில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.
- ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் பலி.
- கூட்ட நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு அச்சம் தொடர்பாக சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.
கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில் 2026 ஐ.பி.எல். கிரிக்கெட் பேட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கர்நாடக மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளை நடத்தவும் அனுமதி பெற்றுள்ளது.
- 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
- இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலி.
- கூட்டல் நெரிசல் தொடர்பாக நீதிபதி குன்கா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருட ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அணி வீரர்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் மைதான வாசலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இன்று கர்நாடக மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் குன்கா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியபடி பார்த்தால் ஆர்சிபி, தனியார் அமைப்புகள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ என்டர்டைமென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
- கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை.
கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆர்சிபி அணி நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அடங்கிய மசோதா கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டவர், நிகழ்ச்சியை செயல்படுத்தியவர்கள் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாக கருதப்படும் வகையில் மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.
மழைக்கால கூட்டத் தொடரின்போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- ஆர்.சி.பி. அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- பெங்களூரு கமிஷனர் உள்பட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றதால், ஆர்சிபி அணி வீரர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர்.
ஆர்சிபி அணிக்கு சட்டசபை அமைந்துள்ள இடத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தைக் காண லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் மைதானத்திற்கு நுழைய முற்பட்டதால் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது நியாமானது, பகுத்தறிவானது அல்ல என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:-
சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. கமிஷனர் எல்லாவற்றையும் புறக்கணித்தாரா? கமிஷனரை எப்படி நீங்கள் சும்மா குற்றம்சாட்ட செல்ல முடியும்? இது நியாயமற்றது.
அவர் தனிமையில் பணியாற்றவில்லை. பெங்களூரு மக்களுக்கு யார் என்ன பங்கு வகித்தார்கள் என்பது கூட தெரியாது. இந்த நிகழ்வில் அவர் தனியாக இல்லை. அரசியல் தலைவர்களும் இருந்தனர்.
பகுத்தறிவு இல்லாத, நியாயமான, விளக்கப்படாத எந்தவொரு இடைநீக்கமும் அதிகாரிகளுக்கான மன உறுதியைக் குலைப்பதாகும். இது மிகவும் அவசரமாக செய்யப்பட்டது. அவர் தனியாக இல்லை. மொத்த அமைப்பின் ஒரு பகுதிதான் அவர்.
இவ்வாறு கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
- கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- ஒரே நேரத்தில் 3 நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- கமிஷனர் மறுப்பு தெரிவிக்க 2 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்துவது. அதன்பின் ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ரோடு ஷோ நடத்துவது, அதன்பின் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் என மூன்று நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டது.
அதேவேளையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற புதன்கிழமை காலை, சித்தராமையா வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது போலீஸ் கமிஷனர் மூன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துள்ளார். ஆனால் மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸ் கமிஷனர் பிடிவாதமாக இருக்க, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதான நிகழ்ச்சிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
- ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
கோப்பை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட பல்வேறு மூத்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.






