என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னசாமி மைதானம்"

    • இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கேரளாவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. 

    இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது.

    பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் முதல் அரையிறுதி போட்டி கவுதாத்தி அல்லது இலங்கையில் நடைபெறும். 2-வது அரையிறுதி நவி மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி நவி மும்பை அல்லது இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலி.
    • கூட்டல் நெரிசல் தொடர்பாக நீதிபதி குன்கா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருட ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அணி வீரர்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் மைதான வாசலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இன்று கர்நாடக மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் குன்கா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் கூறியபடி பார்த்தால் ஆர்சிபி, தனியார் அமைப்புகள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ என்டர்டைமென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
    • கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை.

    கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆர்சிபி அணி நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அடங்கிய மசோதா கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டவர், நிகழ்ச்சியை செயல்படுத்தியவர்கள் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாக கருதப்படும் வகையில் மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.

    மழைக்கால கூட்டத் தொடரின்போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
    • சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

    ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்.சி.பி. அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
    • சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • பெங்களூரு கமிஷனர் உள்பட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றதால், ஆர்சிபி அணி வீரர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர்.

    ஆர்சிபி அணிக்கு சட்டசபை அமைந்துள்ள இடத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதன்பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தைக் காண லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் மைதானத்திற்கு நுழைய முற்பட்டதால் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது நியாமானது, பகுத்தறிவானது அல்ல என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. கமிஷனர் எல்லாவற்றையும் புறக்கணித்தாரா? கமிஷனரை எப்படி நீங்கள் சும்மா குற்றம்சாட்ட செல்ல முடியும்? இது நியாயமற்றது.

    அவர் தனிமையில் பணியாற்றவில்லை. பெங்களூரு மக்களுக்கு யார் என்ன பங்கு வகித்தார்கள் என்பது கூட தெரியாது. இந்த நிகழ்வில் அவர் தனியாக இல்லை. அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

    பகுத்தறிவு இல்லாத, நியாயமான, விளக்கப்படாத எந்தவொரு இடைநீக்கமும் அதிகாரிகளுக்கான மன உறுதியைக் குலைப்பதாகும். இது மிகவும் அவசரமாக செய்யப்பட்டது. அவர் தனியாக இல்லை. மொத்த அமைப்பின் ஒரு பகுதிதான் அவர்.

    இவ்வாறு கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    • ஒரே நேரத்தில் 3 நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • கமிஷனர் மறுப்பு தெரிவிக்க 2 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்துவது. அதன்பின் ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ரோடு ஷோ நடத்துவது, அதன்பின் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் என மூன்று நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டது.

    அதேவேளையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கூட்ட நெரிசல் நடைபெற்ற புதன்கிழமை காலை, சித்தராமையா வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது போலீஸ் கமிஷனர் மூன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துள்ளார். ஆனால் மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    ஆனால் போலீஸ் கமிஷனர் பிடிவாதமாக இருக்க, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதான நிகழ்ச்சிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    • ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
    • ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

    கோப்பை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட பல்வேறு மூத்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • சின்னசாமி மைதான நுழைவாயில் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • ஆர்சிபி அணிக்கெதிராக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகிறார்கள். புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பெங்களூரு சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து கம்பீர் கூறியதாவது:-

    நான் ஒருபோதும் ரோடு ஷோ நடத்துவதை நம்புவதில்லை. ரோடு ஷோ நடத்தக்கூடாது. மக்களின் உயிர் முக்கியமானது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், இங்கிலாந்து டெஸ்ட் குறித்து கூறுகையில் "பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அணி தோற்றாலும், வெற்றி பெற்றாலும் எப்போதும் நான் நெருக்கடியில் இருப்பேன். சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முடிவு தரக்கூடிய சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வோம்" என்றார்.

    • சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் உள்ள விதான சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி பேரணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது.

    விதான சவுதாவில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டனர். பின்னர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசிக்கப் படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஆர்சிபி ஏற்பாடு செய்திருந்தது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.

    இந்தநிலையில் ஆர்சிபி அணிக்கெதிராக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆர்சிபி, டிஎன்ஏ (நிகழ்ச்சி மேலாளர்), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாக கமிட்டி உள்ளிட்டவை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சின்னசாமி மைதானத்தில் முன் ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்தயி அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது:-

    அதிகாரத்தில் இருந்தவர்கள், விதான சவுதாவில் இருந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனம் இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்தது ஏன்?.

    ஏன் இது கொண்டாடப்பட்டது? இது ஒரு அரசு நிகழ்ச்சி அல்ல. பிறகு ஏன் கொண்டாடப்பட்டது? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசாங்கம் ஏன் இதைச் செய்தது? அதனால்தான் நான் பொறுப்புக்கூறலைக் கோருகிறேன்.

    முதலில், கொண்டாட்ட நிகழ்ச்சி இலவசம் என்றார்கள். பின்னர், பாஸ் தேவை என்றும், ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கப்பட்டதாகவும் சொன்னார்கள். நுழைவாயில்கள் திறக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்று வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டனஃ அந்த வாயில்களுக்கு முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உங்கள் சொந்த மாவட்ட துணை கமிஷனர் என்ன மாதிரியான அறிக்கையை வழங்குவார்? அதனால்தான் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒரு பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். டி.கே. சிவகுமார் உடனடியாக ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    இவ்வாறு அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.

    ×