என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    • முதலமைச்சர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்தார்.
    • இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார்

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது.

    இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று டி.கே. சிவக்குமார் வீட்டிற்கு முதலமைச்சர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.

    இது தொடர்பான படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள டி.கே. சிவக்குமார், "காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று எனது இல்லத்தில் முதலமைச்சருக்கு காலை உணவை அளித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

    • இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
    • இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.



    இதற்கிடையே சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமாருக்கு காலை உணவுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை 10 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்-மந்திரியின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ்.பொன்னையா உடன் இருந்தார்.

    பின்னர் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும்.



    • அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்
    • ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். இந்த பிரச்சனைக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார் "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

    இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சித்தராமையா, "கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு குறிப்பிட்ட கணதிற்கு அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

    நான் உட்பட காங்கிரஸ் கட்சி, நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகக்கு நாம் கோடுத்த வாக்கு வெறும் முழக்கம் அல்ல. அந்த வார்த்தை தான் நமது உலகம்" என்று தெரிவித்துள்ளார்.

    இரு தலைவர்களிடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் உருவாகி உள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
    • விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது

    கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார்.  முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

    • எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன்.
    • டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்- சித்தராமையா.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

    முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறும்போது "நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்" என்றார்.

    இந்த நிலையில் சித்தராமையாவின் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேத வாக்கு போன்றது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    சித்தராமையா ஒருமுறை சொன்னால் அது எங்களுக்கு வேத வாக்கு. சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் சொத்தது. அரசில் அவரது வழிகாட்டுதலின்படி எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று இரண்டரை ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
    • அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.

    இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    மேலும், டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு "மேலிடம் முடிவு செய்யும் என்று நான் சொன்ன பிறகு, நீங்கள் மீண்டும் அதையே கேட்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.

    ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு, சித்தராமையா டெல்லி சென்று அவரை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

    முதலமைச்சர் மாற்றம் குறித்து மேலிடம் (உயர்மட்ட குழு) முடிவு செய்யும் என கார்கே தெரிவித்திருந்தார்.

    • சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
    • டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.

    இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கார்கேயிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கார்கே பதில் அளிக்கையில் "பேச்சுவார்த்தை குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இங்கே நிற்பதால் உங்களுடைய நேரம்தான் செலவாகும். நான் மிகவும் கவலை அடைகிறேன். எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடம அதைச் செய்யும். நீங்கள் இதைப் பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

    டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலர் டெல்லி சென்று கார்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனினும், டெல்லிக்கு எம்.எல்.ஏ. சென்றது தனக்கு தெரியாது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
    • தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

    இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். 

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
    • தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

    இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார். 

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.  

     

    இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.

    அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.

    அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார். 

    • சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
    • முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.

    சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.

    அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.

    எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.

    முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

    எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.

    மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.

    மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.

    • சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
    • அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.

    நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

    அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.

    அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
    • ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

    ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் ஆணையை நாம் ஏற்க வேண்டும். பின்னடைவுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

    நான் பீகாருக்கு செல்லவில்லை. யார் வாக்களிக்கவில்லை, ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது என்று எனக்குத் தெரியாது. நான் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன்" என்று தெரிவித்தார்.

    பீகார் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, சித்தராமையா, "அவர்கள் இங்கேயும் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.   

    ×