search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை முடக்கியது.

    இந்நிலையில்  முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோர் நாளை [ஜனவரி 28] நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடகா முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
    • தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்றனர்.

    சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடக்கத்திலுருந்தே வலியறுத்தி வருகின்றனர். 2023 தேர்தலில் வென்ற சமயத்தில் டிகே சிவகுமார் மற்றும் ஆதரவாளர்களின் பிடிவாதம் காங்கிரஸ் மேலிடத்தால் சரிகட்டப்பட்டது.

    தேர்தலுக்குப் பிறகு, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் மீதி இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என்று என்று முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

    தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் பொறுப்பு சிவகுமாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர் என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவரே பதவியில் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இறுதியில் உயர்நிலைக் குழு [காங்கிரஸ்] முடிவெடுக்கும்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறுபுறம், டி.கே.சிவகுமாரும் கட்சியின் முடிவுகளுக்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார்.

    சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களுக்கு ஆதரவாக விடாபிடியாக உள்ளதால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002ன் விதிகளின் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று [வெள்ளிக்கிழமை] முடக்கியுள்ளது.

    முடக்கப்பட்ட சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சொத்துக்கள் முடக்கப்பட்டதைக் காரணம் காட்டி சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று பாஜக வற்புறுத்தத் தொடங்கியுள்ளது.

    "சித்தராமையா தனது முதலவர் பதவியின் மாண்புக்கு மதிப்பளித்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். கர்நாடக மக்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

    • சச்சின் பன்சால் தற்கொலை கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயர் இடம் பெற்றுள்ளதா?.
    • எங்கேயும் அவருடைய பெயர் இல்லை. எந்த விசாரணைக்கும் தயார் என மந்திரி தெரிவித்துள்ளார்.

    சிவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் பிரியங்க் கார்கேவுக்கு தொடர்பில்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    பிரியங்க் கார்கே பெயர் இல்லை. அவருக்கு எந்த பங்கும் இல்லை. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இருந்தபோதிலும் அவரை இன்னும் பதவி விலகச் சொல்கிறார்கள். அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? குற்ற புலனாய்வுத் துறை (சிஐடி) அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. ஒப்பந்ததாரர் ஒருவர் மந்திரி 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக கடிதத்தில் ஈஸ்வரப்பா பெயரை குறிப்பிட்டிருந்தார். அதனால் ஈஸ்வரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

    சச்சின் பன்சால் தற்கொலை கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயர் இடம் பெற்றுள்ளதா?. எங்கேயும் அவருடைய பெயர் இல்லை. எந்த விசாரணைக்கும் தயார் என மந்திரி தெரிவித்துள்ளார் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    பிதார் மாவட்டத்தில் ஒப்பந்ததாரர் சச்சின் பன்சால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வரும் நிலையில் சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ஒப்பந்ததரார் தற்கொலை செய்தபோது கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் ராஜு கபனுர் என்பவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், தான் அவ்வளவு பணம கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    பகனுர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் காரிகேவின் நெருங்கிய உதவியாளர் என பாஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.

    • அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டம்.
    • கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம்

    கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

    பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இந்நிலையில், எதிர்கட்சியினரின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே கர்நாடக சட்டமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.

    அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டிக்கும் விதமாக அனைத்து உறுப்பினர் இருக்கைகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்.

    • மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சியை முடித்தார்
    • 'பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது'

    யுபிஎஸ்சி தேர்வில் வென்று பயிற்சியை முடித்து முதல் முதலாக பொறுப்பேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹர்ஷ் பர்தன், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றவர் ஆவார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அவர் நான்கு வார பயிற்சியை சமீபத்தில் முடித்தார்.'

    பயிற்சிக்காலம் முடித்த நிலையில் ஹோலேநரசிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க ஹாசன் மாவட்டத்துக்கு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஹர்ஷ் பர்தன் போலீஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

    ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே அவர் பயணித்த போலீஸ் வாகனத்தில் டயர் திடீரென வெடித்ததில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது.

     

    இதில் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹர்ஸ் பர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் இளம் அதிகாரி ஹர்ஸ் பர்தன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். 'ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் இறந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். ஐபிஎஸ் பொறுப்பேற்கச் செல்லும் போது இதுபோன்ற விபத்து நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

    பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் போது இப்படி நடந்திருக்கக் கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது X பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

    • கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்தார்.
    • அப்போது மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையாவும், துணை முதல் மந்திரி சிவகுமாரும் சந்தித்துப் பேசினர்.

    அப்போது பிரதமர் மோடியிடம், கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனை பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வளத்தைப் பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியை செய்து கொள்கின்றன.

    மத்திய ஜல்சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை எங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க தாமதம் காட்டுகின்றன.

    குறிப்பாக, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். மஹதாயி, பத்ரா மேலணை போன்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    • பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
    • 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.

    ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.


    இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.

    தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

    50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

    ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி தருவதாக விலை பேசியது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடக அரசை கவிழ்க்க நினைக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி தருவதாக விலை பேசுகிறது.

    அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனாலேயே என் மீது வழக்குகளை பதிவு செய்கிறது.

    பா.ஜ.க.விற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

    முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கின்றனரா?

    அவையனைத்துமே ஊழல் பணம், லஞ்சப் பணம். ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளனர்.

    அந்தப் பணத்தின் மூலம் ஒரு எம்.எல்.ஏவிற்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க. அணுகியுள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொள்ளாததால் எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதால் பல்வேறு பொய் புகார்களை கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

    • எங்கு சென்றாலும் கர்நாடகத்தை பற்றி பிரதமர் மோடி தவறாக பேசுகிறார்.
    • நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, மராட்டிய தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

    இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மராட்டிய மாநில தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறியுள்ளார். இது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அடைந்த தோல்வியில் இருந்து இன்னும் அவர் மீண்டு வெளிவரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. எங்கு சென்றாலும் கர்நாடகத்தை பற்றி பிரதமர் மோடி தவறாக பேசுகிறார்.

    கர்நாடக மதுக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசியல் நோக்கத்துடன் வழங்கிய புகார் அதிவேகமாக பிரதமர் மோடியிடம் போய் சேர்ந்துள்ளது. ரூ.700 கோடி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன். நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

    இதேபோல் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரும் குற்றசாட்டுகளை நிரூபித்தால் எந்த தண்டணையும் சந்திப்பேன் என்று பிரதமருக்கு சவால் விடுத்து உள்ளார். இதுகுறித்த கர்நாடக எதிர்கட்சி தலைவர் அசோகா கூறும்போது, பிரதமர் கூறியதுபோல் காங்கிரஸ் கலால் துறையில் ரூ.700 கோடி கொள்ளையடிக்கவில்லை. 900 கோடி கொள்ளையடித்துள்ளனர். இந்த பணம் மகாராஷ்டிரா தேர்தலுக்கும், கர்நாடகாவில் நடைபெறும் 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    • சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
    • முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4-வது குற்றவாளியாக தேவராஜன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லோக் ஆயுக்தா போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணிக்கு ஆஜரானார். இதையொட்டி அலுவலகம் வெளியே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர்களும் அந்த பகுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தி.கா. உதேஷ் தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி சித்தராமை யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கமாக பதில் அளித்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி லோக் ஆயுக்தா அலுவலகம் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் லோக் ஆயுக்தா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதற்கிடையே மைசூரு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் லோக் ஆயுக்தா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர் இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • முடா நில மோசடி வழக்கை லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிபிஐ-க்கு மாற்றக்கோரி ரிட் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் பதில் அளிக்க மனு.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மீது முடா நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஆர்.டி.ஐ. ஆர்வலர் சினேகாமயி கிருஷ்ணா கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, அவரது மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, மத்திய அரசு, மாநில அரசு, சிபிஐ, லோக்ஆயுக்தா இதுகுறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    அத்துடன் லோக்ஆயுக்தா இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட பதிவு விசாரணையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

    அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையா மனைவியிடம் கடந்த மாதம் 25-ந்தேதி லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×