என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுஸ்மிருதி"

    • பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
    • 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.

    மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.

    மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,

    "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.

    இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

    நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

    பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

    முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

    ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

    இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

    வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார். 

    • நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது
    • நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை.

    "நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை எனவும், மனுஸ்மிருதியை முன்னுதாரணம் காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது" எனவும் மனுஸ்மிருதியை மேற்கேள்காட்டி வழக்கு ஒன்றில் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "இந்தியத் திருநாட்டின் இறையாண்மையும், ஜனநாயகமும் அண்ணல் அம்பேத்கர் வழங்கிய உன்னதமான அரசியலமைப்புச்  சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உயிர்நாடியாகக் கொண்ட இந்த நாட்டில், நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதி வரையறுத்துள்ளதாகத் தனது பேச்சில் குறிப்பிட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். மனுஸ்மிருதி என்பது ஒரு குறிப்பிட்ட வர்ணாசிரமக் கோட்பாடுகளையும், ஜாதியப் படிநிலைகளையும், பெண் அடிமைத்தனத்தையும் போதிக்கும் ஒரு பழமைவாத நூல் என்பதை உலகம் அறியும். அத்தகைய ஒரு நூலை, ஜனநாயக நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையாகச் சித்தரிப்பது என்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மையையும் மதச்சார்பற்ற கொள்கையையும் அடியோடு சிதைக்கும் செயலாகும்.

    இது, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை. நீதிபதியின் இத்தகைய கருத்துக்கள் நாட்டு மக்களிடையே தேவையற்றக் குழப்பத்தையும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் என்பதால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாகத் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×