என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்"

    • மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளார்
    • சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.

    திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

    இந்நிலையில், மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், "பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

    சனாதனம் குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது
    • அறிவு சார் தளமான புத்தக காட்சியில் இது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

    சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புத்தக கண்காட்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் ஒன்றை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிடவிருந்தது.

    இந்நிலையில், கீழைக்காற்றை பதிப்பகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, "நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் அவதூறு பரப்பும் வகையில் மட்டுமல்ல. கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவு சார் தளமான புத்தக காட்சியில் இது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது. ஆகவே அந்த புத்தகத்தை பறிமுதல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக கீழைக்காற்று பதிப்பகம் மூன்று வாரங்களில் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், "குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வராத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது
    • நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை.

    "நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை எனவும், மனுஸ்மிருதியை முன்னுதாரணம் காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது" எனவும் மனுஸ்மிருதியை மேற்கேள்காட்டி வழக்கு ஒன்றில் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "இந்தியத் திருநாட்டின் இறையாண்மையும், ஜனநாயகமும் அண்ணல் அம்பேத்கர் வழங்கிய உன்னதமான அரசியலமைப்புச்  சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உயிர்நாடியாகக் கொண்ட இந்த நாட்டில், நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதி வரையறுத்துள்ளதாகத் தனது பேச்சில் குறிப்பிட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். மனுஸ்மிருதி என்பது ஒரு குறிப்பிட்ட வர்ணாசிரமக் கோட்பாடுகளையும், ஜாதியப் படிநிலைகளையும், பெண் அடிமைத்தனத்தையும் போதிக்கும் ஒரு பழமைவாத நூல் என்பதை உலகம் அறியும். அத்தகைய ஒரு நூலை, ஜனநாயக நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையாகச் சித்தரிப்பது என்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மையையும் மதச்சார்பற்ற கொள்கையையும் அடியோடு சிதைக்கும் செயலாகும்.

    இது, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை. நீதிபதியின் இத்தகைய கருத்துக்கள் நாட்டு மக்களிடையே தேவையற்றக் குழப்பத்தையும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் என்பதால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாகத் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×