என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்றம்"

    • மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
    • 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு மொத்தம் 8,639 புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.

    இதில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்கள் நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன.

    உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகப் பெறப்படும் இத்தகைய புகார்கள், நீதித்துறையின் உள்விவகார நடைமுறை மூலமாகவே கையாளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

    • 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
    • தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).

    1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

    கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. 

    • அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
    • ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது.

    40 ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நிரபராதி என நீதிமன்றம் தற்போது விடுத்துள்ளது.

    விடுவிக்கப்பட்ட தானி ராம்-க்கு தற்போது வயது 100. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தானி ராம். 1982-ஆம் ஆண்டு ஒரு நிலத் தகராறில் நடந்த கொலை தொடர்பாக தானி ராம் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    1984-ஆம் ஆண்டு ஹமிர்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    தண்டனையை எதிர்த்து 1984-லேயே தானி ராம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.

    இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திர தாரி சிங் மற்றும் சஞ்சீவ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தானி ராமை விடுவித்து நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.

    ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.   

    • தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
    • இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது

    ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.

    இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது. 

    • நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
    • பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

    மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

    இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

    அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

    அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

    • ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை
    • ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

    மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரிய மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில், காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அதிகாரத்தை இது பயனற்றதாக்கி விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை.
    • உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி

    மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு விசாரித்து வருகிறது.

    ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதிகள், "உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இந்த அளவிற்கு கடைகள் இல்லை. உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை. கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

    கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலா 100 உணவகம், பொம்மை மற்றும் பேன்சி கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உள்ள கடைகளை அகற்றிவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது
    • அறிவு சார் தளமான புத்தக காட்சியில் இது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

    சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புத்தக கண்காட்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் ஒன்றை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிடவிருந்தது.

    இந்நிலையில், கீழைக்காற்றை பதிப்பகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, "நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் அவதூறு பரப்பும் வகையில் மட்டுமல்ல. கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவு சார் தளமான புத்தக காட்சியில் இது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது. ஆகவே அந்த புத்தகத்தை பறிமுதல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக கீழைக்காற்று பதிப்பகம் மூன்று வாரங்களில் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், "குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வராத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
    • மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

    அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.

    குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.

    மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர். 

    • பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
    • கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பங்கி பிஹாரிஜி மகாராஜ் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தரிசன நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

    தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இதை விசாரித்தது.

    மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் வழக்கறிஞர் தன்வி துபே ஆகியோர், பங்கி பிஹாரிஜி கோவிலில் தரிசன நேரங்களில் மட்டுமல்ல, பல மத வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  மரபின்படி, கடவுளுக்கு ஓய்வு நேரங்கள் உண்டு, ஆனால் அந்த நேரங்களிலும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது என்று கூறினர்.

    இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?. பழங்கால விதிகள், நடைமுறைகள் மற்றும் தரிசன நேரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கை விசாரிக்க உயர்மட்ட கோயில் நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    • இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
    • ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல்

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இது தொடர்பான அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.

    பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயநீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.

    இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

    • தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
    • வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.

    ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.

    இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.

    ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.  

    ×