என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • குலி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்

    ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரனின் பேரன் வீர் சோரனின் திடீர் மரணம் அம்மாநில அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பாய் சோரனின் மகன் பாபுலால் சோரனின் மகன் வீர் சோரன். இவர் பிப்.22 அன்று தனது நண்பர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பிப்.24 அன்று வெளியில் சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிய சிறிதுநேரத்திலேயே வீர் சோரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனே அவர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உடனடியாக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குலி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தீவிர குளிர் அல்லது திடீர் உடல்நலப் பிரச்சினை ஆகியவை சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த துயரச் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
    • விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் நேற்று இரவு, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் லாதேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் (41). இவர் ஒரு சிறிய உணவகம் நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

    கடந்த வாரம் இவரது உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.

    உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    பணக்கஷ்டத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி, இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை சஞ்சய்யின் மனைவி ஏற்பாடு செய்துள்ளார்.

    திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் சஞ்சய்யுடன் அவரது மனைவி அர்ச்சனா தேவி மற்றும் உறவினர் துரு குமார் ஆகியோரும் இருந்தனர்.

    விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக சத்ரா மாவட்டத்தின் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி, உறவினர், மருத்துவர், செவிலியர், 2 விமானிகள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சஞ்சய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவரது மனைவியும் பிறரும் அவருடன் சேர்த்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

    • 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை அழைத்துச் சென்றனர்.
    • வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

    விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.

    அவரை அழைத்துக்கொண்டு, 1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் விமானம் நேற்று இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது.

    மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது.

    அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது 7:34 மணிக்கு, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கசாரியா காட்டுப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் ஸ்டுடியோ அமைத்துள்ளார்.
    • புகை சூழ்ந்ததைக் கண்டு அலறினர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி.

    தனது பூர்வீக சொத்தை விற்று அந்த பணத்தில் வீட்டிலேயே ஹோம் ஸ்டுடியோ அமைத்த விநாயக் பிரஜாபதி, யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

    ஆனால், யூடியூபில் தனக்குக் கணிசமான பின்தொடர்பவர்களோ, சேனலுக்கு ஆதரவோ கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், ஸ்டுடியோவிற்கு உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்ட அவர் உபகாரணங்களுக்கு தீ வைத்துள்ளார்.

    வீடு முழுவதும் புகை சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறினர். அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

    இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஸ்டுடியோவில் இருந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள், சவுண்ட் சிஸ்டம் மற்றும் மின் விளக்குகள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
    • முதல் காலிறுதி போட்டியில் உத்தரகாண்ட் அணி வெற்றி பெற்றது.

    ஜாம்ஷெட்பூர்:

    ஜாம்ஷெட்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆதித்யா சிங் 83 ரன்னிலும், கேப்டன் விராட் சிங் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    உத்தராண்ட் சார்பில் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட்டும், ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய உத்தரகாண்ட் அணி 371 ரன்கள் குவித்தது. ஜெகதீஷ் ச்சித் 70 ரன்னும், குனால் சண்டேலா 68 ரன்னும், அவ்னீஷ் சுதா 64 ரன்னும், அபய் நேகி 47 ரன்னும் எடுத்தனர்.

    136 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போல் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் விராட் சிங் 55 ரன்னும், குமார் குஷாரா 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரகாண்ட் அணி அரையிறுதிக்கும் தகௌதி பெற்றது.

    உத்தரகாண்ட் சார்பில் மயங்க் மிஸ்ரா 5 விக்கெட்டும், அபய் நேகி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்

    • 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை வழிமறித்தது.
    • தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் 2 பழங்குடியின சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை இரவு, கிரிடி மாவட்டத்தில் பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் 2 சிறுமிகளும் கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்த்துவிட்டு சிறுவன் ஒருவருடன் இரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களை வழிமறித்த 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், சிறுவனை துரத்திவிட்டு சிறுமிகள் இருவரையும் கடத்திச் சென்றது.

    அவர்களை அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று, அந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

    • சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
    • அனல் தா என்கிற பதிராம் மாஜி தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 15 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

    சரண்டா காட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிஆர்பிஎஃப் கோப்ரா படையைச் சேர்ந்த சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கும்டி என்ற பகுதியில் நேற்று துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது.

    கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவராணா அனல் தா என்கிற பதிராம் மாஜி என்பவரும் அடங்குவார். அனல் தா தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது

    அவருடன் சேர்த்து உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.   

    • பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
    • இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணதிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமணக் கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து, இன்று, ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மகுவாடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.

    இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.
    • தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது. அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கினார்.

    ஜார்க்கண்டில் மருத்துவமனையின் அலட்சியத்தால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு மாத மகனின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வியாழக்கிழமை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை சிகிச்சையின் போது குழந்தை இறந்தது.

    தனது மகன் இறந்த பிறகு, அவரது தந்தை டிம்பா, உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.

    மணிக்கணக்கில் காத்திருந்தும், அதிகாரிகள் வாகனம் ஏற்பாடு செய்யத் தயாராக இல்லை. இதற்கிடையில், குழந்தையின் தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது.

    அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கி, அதில் தனது மகனின் உடலைச் வைத்தார்.

    மீதமுள்ள பணத்தைதில் சாய்பாசாவிலிருந்து நோமுண்டிக்கு பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டு கையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய மகனின் உடலுடன் பயணித்தார்.

    நோமுண்டியில் இறங்கி தனது கிராமத்திற்கு அவர் நடந்தே சென்றார். மருத்துவமனையிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    ஆம்புலன்ஸ் அப்போது வேறு இடத்திற்கு சென்றிருந்தது என்றும் மேலும் 2 மணி நேரம் காத்திருக்க சொல்லியும் அவர் சென்றுவிட்டார் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறினார்.  

    • அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவால் 2 பெண்கள்உயிரிழந்தனர்.

    தன்பாத் மாவட்டத்தின் கெண்டுவாடி பஸ்தி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கடந்த 2 நாள்களாக கார்பன் மோனாக்ஸைட் விஷவாயு கசிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இதனால் அருகில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த 10,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    விஷவாயு தாக்கியதில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அப்பகுதியை சேர்ந்த பிரியங்கா தேவி என்ற பெண்நேற்று முன் தினம் உயிரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணா லலிதா தேவி என்பவர் நேற்று உயிரிழந்தார்.

    இதனிடையே விஷவாயு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் விஷவாயு கசிவிற்கு பிசிசிஎல் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    • மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    • இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது .

    இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    நேற்று அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

    தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்ஐவி பாதித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
    • வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.

    ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.

    இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.

    ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.  

    ×