search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Champai Soren"

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
    • இதையடுத்து, சம்பாய் சோரன் முதல் மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.

    பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தமுடியாத வகையில், அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி கோர்ட் அனுமதி

    அளித்து உத்தரவிட்டுள்ளது.

    • ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற ஜேஎம்எம் கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
    • 43-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

    அத்துடன் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமைக் கோரினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சம்பாய் சோர்ன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    • சம்பாய் சோரன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கிவிட்டார்.
    • பதவி ஏற்ற 10 நாட்களில் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஆளுநரிடம் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு உள்ளது. அதனால் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமைக் கோரினார்.

    ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் சம்பாய் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து இன்று சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உளளார். அவருக்கு  ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்கும்போது, அவருடன்  பலர் மந்திரிகளாக பதவி ஏற்கலாம் எனத்தெரிகிறது.

    இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலளார் கூறுகையில் "பதவி ஏற்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி தெரிவிக்க வேண்டும்" என்றார்.

    பதவி ஏற்ற நாளில் இருந்து 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.

    • சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருக்கிறது.
    • அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள போதிலும், ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், ஜெ.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நிற்கும் வீடியோவை பதிவிட்டு ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், "81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 பேரின் ஆதரவே போதுமானது. ஆனால் 48 பேரின் ஆதரவை கொண்ட சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கும் செயல் அரசியலமைப்பை அவமதிப்பதோடு, பொது ஆணையை மறுப்பதற்கு சமம். ஆளுநர்களால் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்படுகிறது," என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களையும் அளித்தார்.

    • ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ராஞ்சி:

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

    இதற்கிடையே, ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    தற்போது கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. இங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருப்பதால் நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என நாங்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில மக்கள் எதிர்பார்க்கிறோம்.

    மேலும், தம்மை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

    • முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

    தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    "எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். 

    • அமலாக்கத்துறை காவலில் இருப்பதாக தகவல்.
    • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார்.

    இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி "ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் ஹேமந்த் சோர்ன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சென்றார். சாம்பாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.

    அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
    • இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×