என் மலர்
நீங்கள் தேடியது "குலு மணாலி"
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்
"நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.
கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக்காலப் பெருவெள்ளத்தால் ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
- நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் மணாலிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
- இது தொடர்பான வீடோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணாலியில் ஜிப் லைன் கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது தொடர்பான வீடோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப் லைன் கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் மணாலிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது அக்குடுமபத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
- வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில், குலு- மணாலி மற்றும் கீலாங் இடையே இமாச்சலப் பிரதேசம் சாலைவழி போக்குவரத்து கழகம் (HRTC) கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்துகள் சேவையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குலு மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பனிப்பொழிவைத் தொடர்ந்து இமாச்சல் சாலைவழி போக்குவரத்துக் கழகம் சேவைளை நிறுத்தியது.
இந்நிலையில், இன்று முதல் சேவை மீண்டும் தொடங்கியது. முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
முன்னதாக, பனிப்பொழிவுக்கு பிறகு மே மாதத்தில் தான் சேவை மீண்டும் தொடங்கும். கடந்த, 2019-ல் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பனிப்பொழிவு பகுதிக்கான பேருந்து சேவைகள் மீட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று எச்ஆர்டிசி நிர்வாக இயக்குனர் ரோஹன் சந்த் தாக்கூர் தெரிவித்தார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
- கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
சிம்லா:
ராஜஸ்தான் மாநிலம் பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (வயது 28). ஜவுளிக்கடை அதிபர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இமாசல பிரதேசம் மாநிலம் குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.
மணாலியில் உள்ள பனிமலையில் தனது நண்பர்களுடன் ஏறி உற்சாக சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு 'ஐஸ்'கட்டியாக உறைந்து இருந்த சந்திரா ஆற்றங்கரையில் நின்று போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார். இதனிடையே நிகில் குமாரின் பாரத்தை தாங்காமல் ஐஸ்கட்டி நொறுங்கி உடைந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் நண்பர்கள் கண் எதிரே நிகில் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் நிகில் குமார் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே விலையாக கொடுத்த நிகில் குமாரின் 'இறுதி' போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது
- ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பனி மூடிய சாலையில் ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி உள்ளது.
இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது. எனவே ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்தார். மேலும் கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்தார்.
ஆனால் தரை வழுக்களாக இருந்ததால் அவர் அதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. கடைசியில் டிரக் சறுக்கியவாரே சாலையை விட்டு விலகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
இமாச்சலில் கடந்த டிசம்பர் 8 இல் முதல் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. மணாலியில் பனிப்பொழிவு காரணமாக சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1,000 வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன. மேலும் குலு [kullu] பகுதியில் ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரிலும் நேற்றைய தினம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.






