என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க"

    நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.

    இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

    அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்

    "நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.

    கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மழைக்காலப் பெருவெள்ளத்தால் ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான 2026 தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கினர்.

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பாசிச சக்திகளை விரட்டுவதற்கும், பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பதற்கான முதல் தேர்தல் பிரகடனத்தை கோவையில் எடுத்திருக்கிறோம்.

    தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

    ஆதிகாலத்திலிருந்தே பா.ஜ.க.வின் செயல் அதுவாகத்தான் இருந்துள்ளது. முதலில் ரத யாத்திரை என தொடங்கினார். தற்போது முருகனைக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் இஸ்லாமிய கடவுளை வணங்கி கொண்டு தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கிறார்கள்.

    அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடுத்தது போல, எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுப்போம் என்று கூறிய பிறகே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது.

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இந்தக் கூட்டணி பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க.வின் தலைவர், ஊழல் குற்றவாளியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்தார். அதற்கு அமித்ஷாவும் மோடியும் ஒன்றும் கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முருகன் என்பவர் நெருப்பைப் போன்றவர். சக்தி வாய்ந்த தமிழ் கடவுள். அவருடன் பாஜக தேர்தல் விளையாட்டு விளையாடினால், அவர் பா.ஜ.க.வை சூரசம்ஹாரம் செய்வார்.

    2026-ம் ஆண்டு நடக்ககூடிய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சூரசம்ஹாரம் தான் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரகடனம்.

    தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கோவையில் தொடங்கியுள்ளோம்.

    பா.ம.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாசிச பா.ஜ.க.வின் பக்கம் போகாமல் இருப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மாறி சென்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த பா.ம.க.வின் நிலைப்பாடு அடிபட்டுப் போகும்.

    தலைமுறையை பாழாக்குவதற்கு பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள கடவுள்களை தொட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாட்டிற்கு 'முருகா' என்ற கோஷத்துடன் வந்துள்ளார்கள். முருகன் தமிழ் கடவுள், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எனவே, அவர்களை முருகர் சூரசம்ஹாரம் செய்வார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது கூட்டணி அமைவதற்கான சூழலை உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.

    இதனால் அண்ணாமலையே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என அதில் அச்சிடப்பட்டு உள்ளது.

    அந்த போஸ்டரில் வேண்டும், வேண்டும் அண்ணாமலை வேண்டும். வேண்டாம், வேண்டாம் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

    மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.

    கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

    புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.

    தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.

    2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரிய துறையை கண்டித்து பாஜக சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்வதும்,அப்பகுதியில் இறப்புகள் நேர்ந்தால் அவர்கள் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.

    அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பல கட்ட போராட்டங்கள் மனுக்கள் கொடுத்தும் திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8- வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன்,ராமநாதன் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் குருசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு கனிம வள கொள்ளையை தடுக்க கோரி செங்கோட்டை தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
    • மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது

    பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

    தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
    • ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

    இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.

    ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.

    இந்தியா குறித்து மிக தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும்.

    இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.4,000 கோடிக்கு மேலாக நிதி தர வேண்டும். திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.

    முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது. அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள். 1985 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்.

    தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.

    நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட் டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்.

    பா.ஜ.க. மது அருந்ததாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.

    மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை. மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும்.

    ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாளராக இருப்பார். விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க.விற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்குகளைத் தான் விஜய் பிரிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
    • 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    மதுரை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஈடுபட்ட ஞானசேக ரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை காண போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

    மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷமும் வலுத்துள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்-ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திைர பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளி ரணி சார்பில் மாநில தலைவர் உமாரதி தலைமை யில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.


    மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.


    தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வா கிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக பேரணி தொடங்குவதாக அறி விக்கப்பட்ட சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை.
    • சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சனம்.

    உத்தரகாண்ட் மாநிலம் கான்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன்.

    இந்த தொகுதியில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய உமேஷ் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் அரசியல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    2 பேரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உமேஷ் குமார் எம்.எல். ஏ.வை ஒரு முறைகேடான குழந்தை என்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் விமர்சனம் செய்தார்.

    இதனை கேட்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவருடைய ஆதரவாளருடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் அலுவலக த்திற்குச் சென்றார்.

    அங்கிருந்த ரமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவா ளர்களை அவர்கள் தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சரவெடி போல தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகளில் இருந்து 100 குண்டுகள் பாய்ந்தன. அதில் 70 குண்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்ததாக கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தனது ஆட்களுடன் வலம் வந்து அங்கிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார்.

    சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சிகள் ஒரு சில நிமிடங்களில் அரங்கேறியது. இது பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆவேசமடைந்தார். அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டை நோக்கி நடந்து சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இதனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்பட 4 பேரை டேராடோனில் போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக குன்வர்பிரணவ் சிங் சாம்பியன் கூறுகையில்:-

    தன்னுடைய வீட்டின் முன்பு வந்து உமேஷ் குமார் எம்.எல்.ஏ. தனக்கு சவால் விட்டதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்து ள்ளார்.

    உத்தரகாண்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என குற்றம்சாட்டினார். #RahulGandhi
    புவனேஷ்வர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சென்றார். புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

    பா.ஜ.க.வின் தாய் கழகமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. கல்வி, நீதித்துறை என அனைத்திலும் அவர்கள் ஊடுருவி உள்ளனர். நடுத்தர மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியும் தரமான கல்வி கிடைப்பதில்லை. மருத்துவ துறையிலும் இதே நிலை தான். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.



    கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றம் வேண்டும். இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் மக்களின் தேவைகளை கேட்கிறோம்.

    மோடி என்னை வசைபாடும் போது எல்லாம் அவர் என்னை கட்டியணைத்துக் கொள்வதை போல் நினைத்துக் கொள்கிறேன். மோடிக்கு என்னிடமும், எனக்கு மோடியிடமும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவரை எதிர்க்கிறேன். அவர் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நான் வெறுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #RahulGandhi
    ம.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஏழை மற்றும் விவசாயிகளுக்காக பாடுபடும் கட்சி என தெரிவித்தார். #AmitShah
    போபால் :

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால் வரும் நவம்பர் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    இதனிடையே அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. மலை மாவட்டமான ஜபுவாவில் பாஜக ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று உரையாற்றினார்.

    அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வருவார், காங்கிரஸ்காரர்கள் வருவார்கள், வளர்ச்சி பற்றி பேசுவார்கள், ஜாதி மதத்தை பற்றி பேசுவார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் மக்களைப் பற்றி பேசியது எல்லாம் மறந்துவிட்டு மக்களுக்கான(பழங்குடியினர்) நலத்திட்ட பணத்தை அவர்களின் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார்கள்.

    ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் கட்சி. எங்கள் ஆட்சியில் நலத் திட்டங்களுக்கான பணத்தை மக்களின் வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஆனால், ஜபுவா மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடி இந்த ஆட்சி ஏழைகளுக்கும், விவசாயிகளுக்குமான ஆட்சி என தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அவரின் இதயத்தில் இருந்து நேரடியாக வந்ததாகும்.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களுக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை, ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆதிவாசி கல்யான் மந்த்ராலயா ஏற்படுத்தப்பட்டது.

    இந்த மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேட்கிறேன் பழங்குடியினருக்கு என உங்கள் ஆட்சியின் போது பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற முடியுமா? ஆனால், பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். #AmitShah
    ×