என் மலர்
நீங்கள் தேடியது "Selvaperundagai"
- வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
- ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலர் இப்படி கேள்வி கேட்கலாமா?
அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. நான் கேள்வி கேட்டது குற்றம் என அவர் நினைப்பது நியாயமா? வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி; குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்; துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார்.
ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தகவல் சொல்லவில்லை என்றார்.
- எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு என்னிடத்தில் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு சொல்லாமல் நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
- கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.
- பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும்.
- பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல — மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.
இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாசிச பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
மக்களின் ஆதரவு கொண்ட மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.
இந்தப் பாசிசக் செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி.
ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜகவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.
மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் — நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
- பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குரிமை விளக்க விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்காக பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் சேர்ந்து பறித்து வருவதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
இதே கருத்தை வலியுறுத்தித்தான் ராகுல் காந்தி பீகாரில் பயணம் மேற்கொண்டார். இப்போது வாக்குகளை பறிப்பதற்கும், அடுத்ததாக குடியுரிமையைப் பறிப்பதற்கும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.
இதனை தடுக்கக் கோரி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாவிட்டாலும், நாங்கள் கேட்ட பல தரவுகளை அவர்கள் அழித்துவிட்டனர். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கரேஜ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
நான் எப்போதும் காங்கிரசின் குரலாகவே பேசுகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்காகவும் தி.மு.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம். இப்படி மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு குரலாக காங்கிரஸ் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் சொல்கிறார் எனத் தெரியவில்லை.
பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். 4 தேர்தல்களில் தோல்வியை கண்ட கூட்டணி. அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கூட்டணி. மக்கள் எதிர்ப்பை பார்த்துவிட்டுத்தான் டி.டி.வி. தினகரன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 4 அணிகளாக உடைந்ததற்கும், பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கும் பாரதீய ஜனதா தான் காரணம். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
யார் ஒன்றாகச் சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதகமும் கிடையாது. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால்கூட, வேறு ஒருவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி சென்று நிற்கும் நிலைதான் உருவாகும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 3-வது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
- முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.
மூழ்கும் கப்பல் போன்ற கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக கூட்டணியை மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சித்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை விமர்ச்சித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் குரலாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல் மாறிவிட்டது.
தமிழகதத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்போது டிடிவி தினகரன், செங்கோட்டையன் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலேயே பல குழப்பங்கள் நிலவும் நிலையில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை பேசுகிறார் செல்வப்பெருந்தகை.
செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு புதிதாக ஸ்டிக்கர் ஒட்ட முதல்வர் வெளிநாடு பயணம்.
முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.
மாண்புமிக்க மனிதர்களான டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
- ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு தான் என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இன்று பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாசிச ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்கிறது.
இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் இவ்வாறு வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உண்மையான மாற்றத்தின் குரல் என்றும், ஜனநாயகத்தின் காவலன் என்றும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
- அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான அச்சசுதானந்தன் அவர்கள் வயது மூப்பு மற்றும் முதுமை காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். அண்மையில் நூறாவது பிறந்தநாளை கொண்டாடிய அச்சுதானந்தன் அவர்கள் பொதுவாழ்வில் ஏராளமான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.
முதலமைச்சர் உள்ளிட்ட பெரும் பதவிகளை வகித்த போதும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். அவரது அரசியல் வாழ்க்கை பொதுவாழ்க்கைக்கு வந்துள்ள இன்றைய இளம் தலைமுறைகளுக்கு பெரும்பாடம்.
அச்சுதானந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பொதுவுடமை இயக்கத்தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், " கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார்.
1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
- செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
விழாவிற்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழகன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதில், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.இ. பிரிவு தலைவர் ராஜேந்திரபால் கௌதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி. க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோ கரன், அசன் மெளலானா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின் றனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றி உரையாற்றுகிறார்கள்.
- ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
- தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகரன் சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினான் என்ற விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.
ஒரு பொதுப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
- தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ''பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம்'' என்று தான் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்றைய தலைமைச் செயலாளர் திரு ஷிவ்தாஸ் மீனா அவர்கள், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தை படித்தாலே, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆனால், தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
மருத்துவம் பயின்ற ஐயா அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல், அவதூறு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம்.
இவ்வாறு அவர் கூறினார்.






