என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது- செல்வப்பெருந்தகை
    X

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது- செல்வப்பெருந்தகை

    • வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.
    • ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து மக்கள் பிரதிநிதிக்கு சொல்வது கட்டாயமில்லையா? மூத்த அமைச்சர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலர் இப்படி கேள்வி கேட்கலாமா?

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. நான் கேள்வி கேட்டது குற்றம் என அவர் நினைப்பது நியாயமா? வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மக்களுடன் இருப்பது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள்தான்.

    பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி; குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்; துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார்.

    ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம். இந்த அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×