என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "black flag protest"
- 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
- மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது
பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.
தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.
அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்டப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல், காமு பிள்ளை சத்திரம், குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலி மாயன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் தொடர்ந்து 5 நாளாக கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலைக்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடை பெற்று வருகிறது. இதில் சக்தி ரோடு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வரை 2 இடத்தில் மட்டுமே சாலையை கடக்கும் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி தியேட்டர் சாலையில் திரும்புவதற்கான வழி இல்லை.
இதனால் வாகனங்கள் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்ப டுவதாக கூறி வீரப்பன்சத்திரம் அனைத்து வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாரதி திரையரங்கு சாலை சந்திப்பில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 5-ந் தேதி கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் பகுதி வியாபாரிகள் கூறியதா வது:-
சாலை தடுப்பு வைத்துள்ளதால் தற்போது இருசக்கர வாகனங்கள் ஒரு வழிபாதையில் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உயிரிழ ப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை தடுப்பால் வியா பாரம் முற்றிலும் பாதிக்கப்ப டுகிறது.
மற்ற சாலைகளில் பல இடங்களில் சாலைகளில் இடைவெளி இருந்தும் இந்த சாலையில் மட்டும் தடுப்புகளை அகற்ற பிடிவாதம் பிடிப்பதன் காரணம் புரியவில்லை.
இதனால் வியாபாரி களையும், பொது மக்களையும் பாதுகாக்க இந்த பகுதியில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வருகிறார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால் அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். எங்களது கருப்புக்கொடி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #PMModi
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு நாமக்கல்லுக்கு வருகை தந்த அவரை கலெக்டர் ஆசியா மரியம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் கவர்னர் இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது மணிக்கூண்டு, அண்ணாசிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலு, நவலடி, மாநில துணை தலைவர் ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, சரஸ்வதி, ராணா ஆனந்த் உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீஸ் அதிகாரிகள் சென்று, நீங்கள் அனுமதி பெறாமல் இங்கே ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். கவர்னர் ஆய்வு செய்வதற்கு எதிராக கோஷம் எழுப்புகிறீர்கள். எனவே உங்களை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் கைது செய்கிறோம் என்றனர்.
இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேலும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் கவர்னரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது. அதுபோல் கவர்னர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையடுத்து நாமக்கல் பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா ரதம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜ், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கலெக்டர் ஆசியாமரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் கவர்னரை வரவேற்கும் விதமாக நவதானியங்கள் கொண்டு பொம்மை உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த நவதானிய பொம்மையை பார்த்து கவர்னர் மகிழ்ச்சி அடைந்து, துறை ஊழியர்களை பாராட்டினார். பின்னர் தனியார் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.
பிற்பகலில் பயணியர் சுற்றுலா மாளிகையில் அவர் விவசாயிகள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மாலையில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன் ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விருதுநகரில் ஆளுநருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தான் தி.மு.க.வினரை காவல்துறை கைது செய்தது என தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்