search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop closures"

    • பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கோவில் இணை ஆணையர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து கோவில் இணை ஆணையரை கண்டித்து ராமேசுவரம் பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட மக்கள் நல பாதுகாப்பு பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவில் இணை ஆணையர் தொடர்பான பிரச்சினையை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவில் இணை ஆணையர் மாரியப்பனை மாற்றக்கோரி ராமேசுவரம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் நகரில் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் பகுதியின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். 

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது. அதில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பேருந்தில் ஏறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்று வந்து பயனடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதிலிருந்து பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்கவில்லை. இதனால் கிராம பகுதியான கபிலர் மலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பேருந்தில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோமீட்டர் சென்று பேருந்து ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலை பகுதியில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த பேருந்து போக்குவரத்து வசதிகளை போலவே மீண்டும் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கபில குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

    ெகாரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரியும், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்தும் ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்னர். அதன்படி இன்று பொதுமக்கள் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து கபிலர்மலை முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேருந்து இயக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    ×