என் மலர்

    நீங்கள் தேடியது "encroachments"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
    • .இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார். மனுவில் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பாலாஜி, நிலஅளவையர் சாந்தினி ஆகியோர் சுடுகாடு பகுதி முழுவதும் அளவீடு செய்தனர். அப்போது சுடுகாடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கணேச ஆதித்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    உடன்குடி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி அனல் மின் நிலைய பணிகளில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும். உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு குளங்கள் மற்றும் குட்டைகள், ஆறு ஆகிவற்றிற்கு வருடம் தோறும் தண்ணீர் கொண்டு வந்து முழுமையாக நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன்குடி நகர தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.
    • சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

     அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே , காந்தியின் "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.

    அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இது குறித்து மாலைமலர் நாளிதழில் கடந்த மாதம் 26- ந் தேதி செய்தி வெளி யானது. இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று அங்கு பார்வையிட்டு ஆய்வு நடத்தி னர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும் நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னம் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமாரபாளையத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர்.
    • இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ரோடு ஆக்கிரமிப்பு தீராத பிரச்சனையாக இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    வருடங்கள் செல்ல, செல்ல இந்த ரோடு மிகவும் பழுதாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெற்றனர். இதன்படி நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர். பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.

    மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
    • பழனி நகராட்சி சார்பில் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    தற்போது அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி ேநாக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரும் ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறைகாலம் என்பதால் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முருகனை வழிபட வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரபகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் சாலையின் ஓரங்களில் போடப்பட்டுள்ளன.

    இதுபோன்ற திடீர் கடைகளால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர். நெருக்கடிகளை குறைக்க அடிவாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்பழனி நகராட்சி சார்பில் ் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

    பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அலங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
    • அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கடைகள், ஓட்டல்கள், வளையல், கறி, மருந்து, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புகள், தாழ்வாரங்கள், வாசல்படிகளை ஏற்கனவே வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அளந்து குறியீடு செய்திருந்தனர்.

    அதன்படி, ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது. வாடிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, மற்றும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்புகளால் முழுமையாக நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அருப்புக்கோட்டை,

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகி ன்றன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஓரளவுக்கே கை கொடுத்துள்ளது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளன.

    ஆனால் அருப்புக்கோட்டையில் விவசாயத்திற்கு அங்குள்ள பெரிய கண்மாய், செவல் கண்மாய், தூமைக்குளம் கண்மாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கண்மாய்களில் எந்தவித சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் கண்மாயில் நீர் தேக்கப்படும் அளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதை தவிர தற்போது கண்மாய் முழுவதும் 75 சதவீதம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீர் கண்மாய்களில் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.

    இதுகுறித்து அந்தப்ப குதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்ய வைத்து இறைவன் வரம் கொடுத்தாலும் அதிகாரிகள் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகதியினர் அதிருப்தியுடன் தெரிவித்த னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

    விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
    • சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை மூலமாக திருக்கனூர் கடைவீதியில் ஆக்கி–ரமிப்புகள் அகற்றும் பணி  நடைபெற்றது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன்பஞ்சாயத்து அதிகாரிகள் திருக்கனூர் கடைவீதி–யில் இருந்து தொடங்கி கே .ஆர் .பாளையம் சந்திப்பு வரை கடை வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.

    சைடு வாய்க்காலுக்கு வெளியே யாரும் ஆக்கிரமித்து கடை வைக்கக் கூடாது என எச்சரித்தனர். அதே நேரத்தில் முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ,வாய்க்காலுக்கு வெளியே இருப்பதை மட்டும் அதிகாரிகள் அகற்றுகிறார்கள் எனவும் முறைப்படி கணக்கிட்டு அரசின் இடத்தை அளந்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print