search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udangudi"

    • வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.

    வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    • சீயோன் நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் வெள்ளாளன் விளை ஊராட்சி சீயோன் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம், சீர்காட்சி ஊராட்சி காமராஜ்நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையிலும் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி னார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெள்ளாளன் விளை ராஜரத்தினம், சீர்காட்சி கருணாகரன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், சீர்காட்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட, நிர்வாகிகள் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், சசிகுமார், கிதியோன், பிரவீன், சற்குணராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பனைமரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.
    • இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று காலையில் காய்ந்த முழு பனை மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து கோவில்முன்பு நடவு செய்தனர்.

    அதன் பின் பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.

    இதன் உயரம் 50 அடி ஆகும். இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு படையல் செய்து வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

    இதற்கானஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயந்தி, அறங்காவலர்கள் குழு தலைவர் மகேஸ்வரன் அறங்காவலர்கள் ஜெகநாதன், சுமத்திர பிரகாஷ், சுந்தரராஜ், கஸ்தூரி மற்றும் ஆலய ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • புதியதாக கட்டப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.
    • தென் மாவட்டங்களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. புதியதாக கட்டப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.

    22-ந்தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை, எஜமா னர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜையை தொடர்ந்து

    23-ந்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு குரு ஹோரையில் முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

    கடந்த 24-ந்தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன், பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசத்திற்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்த ர்கள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடந்தது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு தென் மாவட்டங் களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடு களை கோவில் திருப்பணி குழு தலைவரும், உடன்குடி யூனியன் முன்னாள் துணை தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர்.

    • கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி சத்யா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், செம்மறிக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், குமாரலட்சுமிபுரத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய வற்றிற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.

    இக்கட்டிடங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதுவும் அடித்தளமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    முன்பெல்லாம் கிராம மக்கள்அரசு அலுவலகம் நோக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சிக்கு உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடி மேற்கு ஓன்றிய தி.மு.க. செயலாள ருமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்.உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசி பொன்ராணி, செம்மறிக்குளம் ஊராட்சி மன்ற தலைவி ஆகஸ்டா மரியதங்கம், துணைத்தலைவர் நாராய ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. கிளை நிர்வாகிகள் விஜயன், தினகரன், கோபால கிருஷ்ணன், முத்துசாமி, ரூபன், ராஜேந்திரன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜார்ஜ் செல்வின் சகாயம் நன்றி கூறினார்.

    • கோடைமழையின் போது கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.
    • இதனால் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் செட்டியாபத்து கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. 6 மாதங்களுக்கு முன் பெய்த கோடைமழையின் போது இந்த கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கட்டிடம் மக்கள் பயன்பாடுக்கு உகந்ததாக இல்லை என கூறி அதனை நிரந்தரமாக பூட்டி விட்டு, அந்த கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகத்தை இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    இ-சேவை மையம் அலுவலகம் சிறியதாக இருப்பதால் அதில் 2 அலுவலகம் உள்ளே செயல்பட முடிய வில்லை எனவும், அதனால் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பித்து கட்டி அதனை பொது மக்கள் செயல்பாடுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் நவீன கலைநயத்துடன் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபி ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனையொட்டி கடந்த 21-ந் தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.நேற்று காலை அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜை, புன்யா ஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, விநாயகர் ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரம்மா சாரிய பூஜை, தனபூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை யும் நடந்தது.

    மாலையில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சந்தி, பிரவேச பலி, மிருத சங்கிரஹரணம், பாலிஹாஸ்தா பனம், ரஷாபந்தனம், கலா கர்ஷணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது.

    இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, ஸ்பரு ஷாஹீதி, நாடிசந்தானம், நாமகரணம் ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாரா தனையும், காலை 8.15 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கலசத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதில் ஊர் மக்கள் மற்றும் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும், 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி யை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் முத்து ஹரிஹர சுப்பிரமணியன் என்ற ஹரிஷ் பட்டர் நடத்துகிறார்.

    ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் யூனியன் துணைத் தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.

    • உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது.
    • தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது. இவைகளுக்கு இந்த ஆண்டு எப்படியாவது தண்ணீர் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர். தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள்இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பருவமழை வரும். குளம்- குட்டைகள் முழுமையாக நிரம்பி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விவசாய அமைப்புகள் தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளம்- குட்டைகளை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.

    இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், அரசு சீரமைப்பதாக சொல்லி குளம், குட்டைகளில் உள்ள மணலை அள்ளி எடுத்துசென்று விடுவார்கள். நாங்கள் குளம், குட்டைகளில் உள்ள மணலை எடுத்து கரையோரமாக வைத்து கரைகளை பலப்படுத்துகிறோம். எல்லாமே அரசுசெய்யும் என்று காத்திருந்தால் காலதாமதம் ஆகிவிடும். அதனால் நாங்கள் இப் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.

    • பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு அமைச்சர்கள் விருது வழங்கினர்.

    உடன்குடி:

    பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விருது வழங்கினர்.

    தொடர்ந்து 5-வது முறையாக மாநில விருது பெற்ற நூலகர் மாதவனுக்கு வி.வி.பி., கல்வி டிரஸ்ட் சேர்மனும், தட்சணமாற நாடார் சங்க கல்லூரி செயலாளர் வி. பி. ராமநாதன், தஞ்சாவூர் தொழிலதிபர் நடராஜன், தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜாண் சாமுவேல் மற்றும் வாசிப்பு இயக்க பொருளாளர் ஜெகநாத பெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இந்த ஆண்டு திருவிழா நேற்று யாகசாலை பூஜை, பூ கையில் இருந்து புனித நீர் எடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் தொடங்கியது.
    • அடுத்த மாதம் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக் குடியிருப்பு குதிரை மொழி தேரியில் அமைந் துள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட் டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இங்கு வருடம் தோறும் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். அதே போல் இந்த ஆண்டு திருவிழா நேற்று யாகசாலை பூஜை, பூ கையில் இருந்து புனித நீர் எடுத்து சுவாமி களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் தொடங்கியது.

    பகல் 2 மணிக்கு ஆலயத் திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும், தினசரி மாலையில் வில்லிசையும் தொடர்ந்து நடைபெறும். அடுத்த மாதம் 14-ந்தேதி (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு ஐவர்ராஜா பாலையம்மன் பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாகாப்பு தீபாராதனையும் நடைபெறும். மறுநாள் டிசம்பர் 15 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 10 மணிக்கு மகளிர் கோலம் போடும் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் உற்சவர் வீதி உலா வருதல் நடக்கிறது.

    16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல், காலை 9 மணிக்கு தாமிர பரணி தீர்தம் வெள்ளி குடத்தில் எடுத்துவந்து ஊர் எல்லையில் இருந்து யானை மீது வைத்து வானவேடிக்கை, மேள தாளத்துடன் ஊர்வலமாக வருதல், தொடர்ந்து பேச்சி யம்மன்னுக்கு முளைபாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிழச்சி நடைபெறும்.

    இதைக்காண பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கூடுவார்கள். கள்ளர்வெட்டுநடந்த இடத்தில் இருந்து புனித மணலை எடுத்து வீடுகளுக்கு சென்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய் வார்கள்.

    சுப நிகழச்சிகள் நடக்கும் போது இந்த மணலை பயன் படுத்துவார்கள். இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அடுத்த மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து குடும்பத்துடன் வந்து, கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநி லையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, தக்கார் தமிழ்செல்வி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஆலய ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    உடன்குடி:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் தற்காலிக மலட்டுத்தன்மை நீக்குதல், குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம்செய்தல், சினைப் பரிசோதனை, கருவூட்டல் செய்தல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சித்தலைவர் காமராஜ், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார், கால்நடை டாக்டர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நேருவின் வரலாறு குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி பெரியதெருவில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம் தலைமை தாங்கி, நேரு வேடம் அணிந்து வந்த சிறுமிகள், கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நேருவின் வரலாறு, குழந்தைகள் மீதான அவரது பாசம் குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார். இதில் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சுகிர்தா, அங்கன்வாடிப் பணியாளர்கள் சுபா, சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×