என் மலர்

    நீங்கள் தேடியது "udangudi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது.
    • பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டாரப் பகுதியில் அனைத்து தாப்பு மக்களும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

    தென்னை மரங்கள்

    ஆனால் சமீபகாலமாக பருவம் தவறி பெய்தமழை, பருவகாலங்களில் பொய்யாத மழை உள்ளிட்வைகளினால் ஏற்பட்ட வறட்சியால் உடன்குடி பகுதிகளில் தென்னை, பனை உள்ளிட்ட விவசாயம் வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைவால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் ஏராளமான தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தென்னை மரங்கள் கருகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    குறிப்பாக மெஞ்ஞான புரம், உடன்குடி, பரமன் குறிச்சி பகுதிகளில் ஏராள மான தென்னை மரங்கள் கருகி சாய்ந்து கொண்டி ருக்கிறது. பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    விவசாயிகள் கோரிக்கை

    எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் தக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வருங்காலங்களில் நீர் மேலாண்மையில் பல நல்ல திட்டங்களை வகுத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் தொகுதி அளவிலான அ.தி.மு.க. பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.
    • மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

    உடன்குடி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கம் குறித்த திருச்செந்தூர் தொகுதி அளவிலான பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி ஓன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஓன்றிய செய லாளர்கள் ராமச்சந்திரன், ராஜ்நாரா யணன், சவுந்தி ரபாண்டி, காசிராஜன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பி னர்கள் முருகேஸ்வரி ராஜ துரை, மகாராஜா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, ஊராட்சி துணைத்தலைவர்கள் ராஜ்குமார், செல்வகுமார், தலைமை நிலைய பேச்சா ளர்கள் பொன் ஸ்ரீராம், இன்பகரன், ஓன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் உடன்குடி குணசேகரன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

    அ.தி.மு.க. கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வில்லை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு முறையாக நிறைவேற்றவில்லை.

    மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து விளையாட்டு அணியினருக்கு உபகரணங்கள், பெண்க ளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், ஜெயலலிதா பேரவை ஓன்றிய செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ்பாபு, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஓன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரெங்கன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொருளாகும்.
    • விவசாயிகளிடம் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொரு ளாகும். இந்த இரண்டும் இப்போது விலை இல்லாமல் உள்ளது. விவசாயிகளிடம் முரு ங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியா பாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் ஒரு கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இது உற்பத்தி செலவை விட வருமா னம் மிகவும் குறைவாக இருப்ப தாக விவசாயிகள் கூறுகி ன்றனர்.

    ஏற்றுமதி செய்தாலும் விலை இல்லை என விவசா யிகள் கூறுகின்றனர். தொ டர்ந்து உற்பத்தி செய்யும் விவ சாயி களுக்கு உதவி த்தொகை மற்றும் ஊக்க த்தொகை சலுகை விலையில் பல்வேறு விவசாய பொருட்க ளை வேளாண்மை துறை மூலமாக அரசு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தலைவர் பெர்னார்டு, துணைத் தலை வர்கள் சங்கர் எம்.எல்.ஏ., மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர்கள் தம்பிதுரை, பொன்னரசு, ஜெயபிரகாஷ், புளோரன்ஸ், ரவிச்சந்திர ராமவன்னி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிஷங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாத புரத்தில் நடந்தமீனவர்நல மாநாட்டில் தமிழக மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது, விசைப்படகுகளுக்கான மானியவிலை டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கி உத்தரவு பிறப்பித்தது, மீனவர்கள் நலத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 5,034 வீடுகளுக்கு பட்டா வழங்க உத்தரவு, 45 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்க உத்தரவு,

    தூத்துக்குடி, கன்னி யாகுமரி, நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் களுக்கு மண்எண்ணைய் 3,400 லிட்ட ரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தியது,

    தங்கச்சிமடத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு, பாம்பன் பகுதியில் உள்ள மீன் பிடி படகுகளை நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைப்பதற்கும், ஆய்வு மேற்கொள்ள மற்றும் குத்துக்கால் மீன்பிடித்து றைமுகத்தில் படகுகளை நிறுத்த தூண்டில் வளைவு பாலம் அமைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவு,

    மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் அமைக்க ப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்,

    மீனவர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி உத்திரவு,

    நாட்டுப்படகு மீனவர்க ளுக்கு மானிய விலையில் ரூ. ஆயிரம் வெளி பொறுத்தும் எந்திரம் வழங்கிட உத்திரவு என 10 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க., மீனவர் அணி மற்றும் ஒட்டு மொத்த மீனவ சமுதாயம் சார்பில் பாராட்டு தெரிவிப்பது, கலைஞர் தூற்றாண்டு விழா மீனவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களில் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.
    • தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.

    உடன்குடி:

    குகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா விற்காக பல்வேறு பணிகள் தற்போது தொடங்கப்ப ட்டுள்ளது,

    குலசேகரன்பட்டினத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டு களுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.

    இதுகுறித்து நெடு ஞ்சாலைத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் முறையான பதிலளிக்கப்பட வில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்று வதற்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் வந்தனர். அப்போது வீடு கட்டி குடியிருந்த குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே குலசேகரன்பட்டினம் போலீ சார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனையடுத்து பல ஆண்டுகளாக நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறும் போது பலலட்சம் கூடும்தசரா பக்தர்களுக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதுவும் விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார்.
    • பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார். பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அப்போது அந்த கடையில் இருந்த வாலிபர் இந்த ரூபாயை நான் பார்த்ததே இல்லை. இது செல்லாத ரூபாய் நோட்டுகள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேறு ரூபாய் நோட்டுக்கள் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

    உடனே அந்த மூதாட்டி, இது நமது இந்திய அரசு வெளியிட்ட பணம் தான் என்று சொல்லியும் கடையில் இருந்த வாலிபர் வாங்க மறுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த சிலர் இந்த பணம் செல்லும் என்றும், சிலர் சொல்லாது என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். எனினும் அந்த மூதாட்டியிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. பின்னர் ரூ. 50 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
    • இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்தாரம்மன் கோவில்

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-வது இடம் வகிக்கும் இக்கோவிலில், இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    24-ந்தேதி மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. பல லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கூடி பல்வேறு வேடமனிந்து தங்களது வேண்டுதல்களை செலுத்தும் தசரா விழாவாகும். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் கூடுவது ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கான உண்டியல் வருமானம் வருவது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

    அறங்காவலர்கள் நியமனம்

    இக்கோவிலுக்கு பல ஆண்டுகளாக அறங்காவ லர்கள் நியமிக்கப்பட்ட வில்லை. இதனால் தசரா பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் மற்றும் பல்வேறு திருப்பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக அறங்காவ லர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
    • எனவே பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரி கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்குஅனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு உவரி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு குளிர்சாதன பஸ் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் பக்தர்களை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர், இந்த பஸ்சில் தசரா பக்த ர்கள் ஏராளமானவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். சுற்றுப்புற கிராம மக்கள்மற்றும் பயணிகள் வசதிக்காக இந்த அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சி கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்று உள்ளது.

    இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444- வது ஆண்டு மகிமை பெரும் திருவிழா இன்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திரு விழா தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் வழங்கி, மறையுறை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் அப்பம் வழங்கினார். இதில் ஊர் மக்கள் அனைவரும், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக் கிறது.

    விழாவின் முக்கிய நாட்க ளான 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6,30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு சிறப்பான வரவேற்பு, மாலை பெரும் விழா மற்றும் மாலை ஆரா தனை சிறப்பு மறையுறை நடக்கிறது.

    14-ந்தேதி (வியாழக் கிழமை) மகிமை பெரு விழாவையொட்டி அதி காலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலியும், 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமை பெரும் விழா நிகழ்ச்சி, புதிய சபையினர் தேர்வு செய்தல், மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது, திருவிழாவில் முக்கியமான நாட்களான 13 மற்றும்

    14-ந்தேதி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளா வில் இருந்தும் இறை மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏராளமான மக்கள் கார், பஸ், வேன் போன்ற வாக னங்களில் குடும்பத்துடன் வந்து 2 நாள் தங்கியிருந்து திருப்பலியில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடன்குடி பேரூர் பகுதியில் அதிக அளவு புதிய உறுப்பினர்கள் சேர்த்த நிர்வாகிகளுக்கு செயலாளர் மால் ராஜேஷ் தங்க மோதிரம் வழங்கினார்.
    • கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடியில் தி.மு.க. நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மால்ராஜேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜாண் பாஸ்கர் மற்றும் ஷேக் முஹமது, அப்துல் ரசாக், தங்கம், மேகநாதன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூர் பகுதியில் அதிக அளவு புதிய உறுப்பினர்கள் சேர்த்த நிர்வாகிகளுக்கு செயலாளர் மால் ராஜேஷ் தங்க மோதிரம் வழங்கினார்.

    கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடன்குடி நகர தி.மு.க. சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு கொடுப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் வார்டு செயலாளர்கள் இஸ்மாயில், இசக்கிமுத்து, ராஜ்குமார், ஆட்டோ கணேசன், அன்வர் சலீம், சலீம், பஷீர், முருகேசன், கணேசன், சாம்னேஸ், ராஜேந்திரன், கணேஷ், நாராயணன், சரஸ்வதி பங்காளன், மனோ, தீபன் சக்ரவர்த்தி, விஜயன், சாரதி, குங்பூ சங்கர் ராயர், முகேஷ், விஜய், மும்தாஜ், பிரவீனா, ஜெபமலர், வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் நன்றி கூறினார்.