என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udangudi"

    • உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மட்டும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, நயினார்பத்து, பிச்சிவிளை, செட்டியாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, நியினார்பத்து, சுதந்திர நகர், பரமன்குறிச்சி, சீருடையார்பு ரம். குருநாதபுரம், வட்ட ன்விளை, செட்டிவிளை, அத்தியடி தட்டு, சிவலூர், ஞானியார்குடியிருப்பு, தீதத்தாபும், தாண்டவன்காடு, பெரி யபுரம், சிறுநாடார்குடியிருப்பு, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம், நாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம் மற்றும் சியோன்நகர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மின் நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறுஉடன்குடி துணை மின் நிலையத்தில் வினியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் உடன்குடி வட்டார பகுதியை மழை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

    உடன்குடியை சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்கள் தண்ணீர் இல்லாமல் முழுமையாக வறண்டு கிடக்கிறது.

    மழை வந்து கடலுக்கு வீணாக செல்லும்போது மட்டும்தான் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காத்திருக்காமல் ஏதாவது ஒரு வழியில் இந்த 15 நீர் பிடிப்பு குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி பகுதியில் பாசன குளங்கள் ஒரு சில மட்டுமே உள்ளது.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான். பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் முழுமையாக நிரப்பி கொடுத்தாலே விவசாயம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இதனால் மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை. 15 நீர் பிடிப்பு குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.







    • செம்புலிங்க புரத்தில் ரூ.11.10 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்குஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்புலிங்க புரத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.10 லட்சம் மதிப்பில் யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    ஆதியாக்குறிச்சி ஊராட்சி தீதத்தாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.19.91 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

    இப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிதலைவர் பால சரஸ்வதி, ஆதியா குறிச்சி ஊராட்சிதலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.இதில் மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பால முருகன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமஜெயம்,

    அருணாசலம், மகா விஷ்ணு, மாவட்டப் பிரதிநிதிகள் ரவிராஜா, மதன்ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டக் காங்கிரஸ், பொருளாளர் நடராஜன், ஆதியாகுறிச்சி ஊராட்சி துணைத் தலைவர் பவுல், ஊராட்சி, செயலர் (பொறுப்பு) ரசூல் திமுகவைச் சேர்ந்த மணல் கணேசன். பாய்ஸ், அஜய் உடன்குடி பேரூராட்சியின் கவுன்சிலர்கள் முன்னாள் கவுன்சிலர்கள், பேரூ ராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
    • இன்று இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நேற்று கணபதி ஹோமம், யாகசாலைபூஜை வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. நேற்று மாலை நாட்டில் வறுமை நீங்கி, செழுமை பெற பாடல்கள்பாடி சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடந்தது.வில்லிசை, நள்ளிரவு 1மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம்தெருவீதிபவனிவந்தது.

    இன்று காலை 10 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வில்லிசை, பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் கும்பம் தெருவீதி வருதல், இன்று இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சல் பெட்டி ஊர்வலம், காலை 11 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் வில்லிசை, நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் கும்பம் தெருவீதிவருதல் மாலை 3மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கும். 3-ந்தேதி காலை கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு வரி பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • உடன்குடி பேரூராட்சி வார்டுகள் மற்றும் செட்டியாபத்து ஊராட்சியில் மக்கள் குறைகேட்கும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது
    • குப்பைகளை தெருவில் வீசாத வண்ணம் வீட்டிலேயே சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி வார்டுகள் மற்றும் செட்டியாபத்து ஊராட்சியில் மக்கள் குறைகேட்கும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது.

    உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் உறுப்பினர் மும்தாஜ் பேகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர் மற்றும் சுயம்புராஜ், முகமது சலீம், காஜா முகைதீன், முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-வது வார்டில் உள்ள மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அப்போது ஒரு பெண் திடீர் என எழுந்தார். தங்கள் வீட்டில் பால் பாக்கெட் தினசரி வீட்டு வாசலில் உள்ள பையில் போடுகின்றனர். ஆனால் உடனே அங்கு சுற்றி திரியும் குரங்கு அதை தூக்கி சென்று விடுகிறது. இதனால் பல நாள் காலையில் காபி குடிக்க முடியாமல் அவதிப்படுகிறேன் என்று அவர் கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த பேரூராட்சி கவுன்சிலர் பேரூராட்சி மூலமாக ஆடு, மாடு, பன்றி, நாய்கள் ஆகியவற்றை பிடிப்பதற்கு மட்டுமே பேரூராட்சிக்கு அனுமதி உள்ளது. குரங்கை பிடிக்க வனத்துறைக்கு சிபாரிசு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் குப்பைகளை தெருவில் வீசாத வண்ணம் வீட்டிலேயே சேகரிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன்குடி சோமநாதபுரத்திலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது.

    • தாங்கைகுளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும்
    • மழை பெய்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சியில் 224.8 ஏக்கர் பரப்பளவில் தாங்கைகுளம் உள்ளது. இது ஒரு நீர்பிடிப்பு குளமாகும். இந்த குளத்திலிருந்து எந்தவிதமான கால்வாய் பாசனமும் கிடையாது.

    இந்த குளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும். கடல் நீர்மட்டம் விவசாய விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். இந்த குளத்தின் மூன்று புறமும் கரையை உயர்த்த வேண்டும் என்றும், குளம் நிரம்பி மறுகால் பாயும் கலுங்கை 2 அடி உயர்த்த வேண்டும் என்றும், தற்போது பழுதாகி உடைந்து கிடக்கும் கலுங்கை உடனடியாக சீர் படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மழை பெய்து இக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    • விளைநிலங்களில் கடும்வறட்சி ஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது.
    • குழிகள் அமைத்து அதில் மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை நிலத்திற்குள் புகாமல் தடுக்கும்.

    உடன்குடி:

    உடன்குடிவட்டார பகுதிக்குஉட்பட்ட ஏராளமான விவசாய விளைநிலங்களில் கடும்வறட்சிஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது. விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கிணற்று நீரும் உப்பாகி பம்பு செட் விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதை தடுக்க விவசாய விளை நிலங்களை சுற்றி வேலியின்கரையில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு இரண்டுக்கு இரண்டு அடி அகல நீளவாக்கில் சிறு குழிகள் அமைத்து அதில்மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை விவசாய விளை நிலத்திற்குள் புகுந்து விடாமல் தடுக்கும் என்றும், இதனால்கிணறுமூலம் பம்புசெட்அமைத்து விவசாயம் செய்யும் கிணற்றில் உள்ள நீர் உப்பு நீராக மாறாது என்றும், விவசாய நிலங்களில் உள்ளநீரும் நல்ல நீராக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது தோட்டங்கள் மற்றும் விவசாயநிலங்களை சுற்றி குழி தோண்டி வருகின்றனர்.

    • பருவமழை பெய்து வருவதால் அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
    • தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது

    உடன்குடி:

    தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதியிலுள்ள எல்லப்பநாயக்கன்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வரும். தற்போது தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் இக்குளத்தில் முறையாக தண்ணீர் வருவதற்கு வாய்பு இல்லை, இதனையடுத்து சமூகஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியுள்ளது. இதனால் குடிநீர், மற்றும்விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுபாடு வரும் நிலை உருவாகும். ஆண்டுதோறும் குளங்கள் நிரப்பினால், நிலத்தடி நீர் மற்றும் பம்பு செட் விவசாயம் செய்யும் கிணற்று தண்ணீர்தன்மைமாறாமல் இருக்கும் என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து தருவைகுளம் பகுதி வரை சிதிலமடைந்த நீர்வழித்தடங்களை சீரமைத்தும், புதியதாக கால்வாய்கள் அமைத்து உடன்குடி ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மழைக்காலங்களில் வடிகால் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்கும் வகையில் நீர்வழித்தடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங் ஆய்வுமேற்கொண்டார். அப்போது சமூகஆர்வலர், ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோகணேசன், வக்கீல் செல்வகுமார் உட்பட சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கால்வாய் சீரமைப்பு பணிக்கு சொந்த செலவில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விவசாயிகள் பாராட்டினர்.

    • உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை.
    • தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால், பஸ்நிலையம் வரும் பயணிகள்அவதிபட்டனர்.

    இதுபற்றி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் கூறினர். தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப்கல்லாசி, செயல் அலுவலர் பாபு, வார்டு கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், அன்புராணி, சரஸ்வதிபங்காளன், மற்றும் சிவா, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த தலைவர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள் ஆகியோரை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.

    • தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்

    உடன்குடி:

    உடன்குடி தண்டுபத்து மெயின் ரோட்டில் இருந்து சீர்காட்சி செல்லும் பிரிவு சாலைகுண்டும், குழியுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பழுதாகி உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரியபள்ளம் ஏற்பட்டு உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடவேண்டும்என்றும், சாலையோர பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என்றும், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மாணவி காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்
    • வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார்

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த வர் இந்திரா (வயது 54) இவரது மகள் மாலதி ( 17). இவர் காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது.
    • உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் நான்கு முக்கு சந்திப்பு சாலை மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது. மேலும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குள்ளே தண்ணீர் புகுந்து விடும் சூழ்நிலை பல மாதங்களாக இருந்தது வந்தது.

    இது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு அதிரடியாக பணி நடந்தது. மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    உடன்குடிபேரூராட்சி தலைவர் ஹுமைரா செயல் அலுவலர் பாபுல வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, பிரதிப் கண்ணன், முகமது ஆசிப், மற்றும் பலர் உடன் இருந்தனர் தண்ணீர் தேங்காதபடி நிரந்தர நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடன்குடி உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் எனஅனைவரும் நன்றி தெரிவித்தனர்.

    ×