search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged road"

    • தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது

     முத்தூர் : 

    காங்கயம், சென்னிமலை சாலையில் ஆலாம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை வரை பல வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வழியாக பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வேன் மற்றும் கனரக லாரிகள், அரசு பஸ், தனியார் வாகனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன்கள், தனியார் பள்ளி வேன்கள் என தினசரி எண்ணற்ற வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. மேலும் விவசாய பொருட்களையும் விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்க்கே பயன்படாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது : இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது குண்டும் குழியுமான சாலையால் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக உள்ளது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்து செல்வதற்கு வெகு நேரம் ஆகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாள்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பராமரிப்பும் இல்லாததால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்படை ந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதன் வழியாகவே பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெருமாள்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை வலியுறுத்தி பெருமாள்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காட்வின் டைட்டஸ் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளார்.

    • கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
    • குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த சாலைகளில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அணைக்காடு தனியார் பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போதிய பராமரிப்பின்மை மற்றும் சேதமடைந்துள்ளதால், இந்த சாலைகளில் தினமும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலைகளின் தற்போதைய நிலை போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை பாதிக்கிறது.தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி குழந்தைகளுடன் கீழே விழுந்த சம்பவங்கள் ஏராளம்.

    இந்த சாலையின் முற்றிலும் உடைந்த பள்ளத்தை கடக்க முயன்ற போது தாயின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு குழந்தை திறந்தவெளி பள்ளத்தில் விழுந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

    • செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் மனோகரன் வரவேற்றார். கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

    தலைவர் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் முன்னாள் ராணுவத்தினர் ராமதாஸ் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் தாய் செய் நல விடுதி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மோசமான நிலை ஏற்பட்டு பூட்டி போடப்பட்ட நிலையில் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவையாம்பிகை நகரில் மோசமான நிலையில் ரோடு சேதம் அடைந்து உள்ளதால் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    சுடுகாட்டு பாதைக்கு செல்லும் தெருக்களில் மரங்கள் இடையூராக இருப்பதால் மரங்களை அப்புபடுத்தி இறந்தவர்களை எடுத்துச் செல்ல இடையூர்யில்லாமல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமசபையில் பொது மக்களுடன் வலியுறுத்த ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கட்டமைப்பு பிரிவு முன்னாள் உதவி திட்ட அலுவலர் நக்கீரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத்த லைவர் உமாராணி நன்றி கூறினார்.

    • குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலை குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சியில் குளத்துப்பட்டி, சீத்தாபுரம், வடக்கு விராலிப்பட்டி, தெற்கு விராலிப்பட்டி, எஸ்.தும்ம லப்பட்டி, சேவுகம்பட்டி, சென்ன மாநாயக்கன ்கோட்டை, தம்பிநாயக்க ன்பட்டி, என். ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொது மக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் குளத்து ப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி யளிப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது. எனவே குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி வரை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
    • வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார் சாலை அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிலான தார் சாலை பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் குறிப்பிட்ட அளவிலான பகுதிக்கு மட்டும் தார் சாலை அமைக்க தற்போது வரை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

    இதற்கிடையே கடந்த வாரம் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. எனவே இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலை சேதமடைந்த பகுதியில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக வருசநாடு முருக்கோடை இடையே சாலை அதிக அளவில் சேதமடைந்து விட்டதால் ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களை இறக்கிவிட்டு குறிப்பிட்ட தொலைவு நடந்த சென்று மீண்டும் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு வாலிப்பாறை இடையே விடுபட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர்.
    • தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியை ஸ்ரீவில்லிபுதூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அறிவி ப்பிற்கு பின்னர் வனத்துறையினர் மலை க்கிராம பொது மக்களுக்கு பல்வேறு கட்டு ப்பாடுகளை விதித்துள்ளனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிரா மங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டு ரோடு உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதனால் மலைக்கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே கிராமங்களில் அமைக்கப்ப ட்டிருந்த சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை வடிகால்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைப்பதற்கு கூட வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மலைக்கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வருசநாடு அருகே காந்திகிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை தொடர் மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்காத காரண த்தால் தற்போது சிமெண்டு சாலை முழுவதுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. அதேபோல இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிரா மங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.
    • பொதுமக்கள் விளை பொருட்களை தலைசுமையாகவோ, மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசணியூத்து, முத்தூத்து, தேக்கிளைகுடிசை, திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பயிர்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

    இந்தநிலையில், இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.

    இதனால் ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலை வழியாக இயக்க முடியவில்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விளை பொருட்களை சிங்கராஜபுரம் கிராமம் வரை தலைசுமையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

    இதனால் நேர விரையம் ஏற்பட்டு விளை பொருட்களை உரிய நேரத்திற்கு சந்தைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.

    இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இது சுற்றுலா தளமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்கள், மருத்துவ வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இந்த மோசமான சாலையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இதனால் அப்பகுதி கவுன்சிலர், சமூக ஆர்வலர்கள் சாலையை சீரமைக்கக்கோரி முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதியடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11 -வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊத்து பகுதியில் இருந்து நாலுமுக்கு நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள குண்டு, குழிகளை மணலால் மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

    கவுன்சிலர் தலைமையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட இந்த செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.
    • சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டி ப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.

    தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்ப டையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாமங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை வழியாக பள்ளிக்கு வருகிறார்கள்.

    அப்பொழுது செம்மண் ஏற்றி செல்லும் லாரி அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலைகளிலே தண்ணீர் ஊற்றி செல்வதால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதி அடைந்து ஒதுங்க கூட முடியவில்லை. மணல் ஏற்றி வரும் லாரிகள் சாலைகளில் விதிமுறை களை பின்பற்றாமல் அதி வேகமாக சென்று வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் கூட லாரியின் வேகத்தை குறைக்காமல் சென்று வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமா என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி தனியார் நிலங்களில் மண் குவிக்கப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. செம்மண் எடுக்கும் இடத்தில் அரசு அறிவித்த அளவைவிட 50 அடிக்கும் மேலாக வெட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களில் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

    • கனமழையால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
    • புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பெரும்பாறை:

    பெரும்பாறை அருகே புல்லாவெளியில் கடந்த மாதம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.

    இதனால் அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமம் ஏற்பட்டது. எனவே சேதமடைந்த பகுதியில் புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தப்பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ×