சேதமான சாலைகளை சீரமைக்க கோரி ஆசிரியர்கள்- மாணவர்கள் மனு

இந்த சாலைகளில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.
மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் அணைக்காடு தனியார் பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போதிய பராமரிப்பின்மை மற்றும் சேதமடைந்துள்ளதால், இந்த சாலைகளில் தினமும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

சாலைகளின் தற்போதைய நிலை போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை பாதிக்கிறது.தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி குழந்தைகளுடன் கீழே விழுந்த சம்பவங்கள் ஏராளம்.

இந்த சாலையின் முற்றிலும் உடைந்த பள்ளத்தை கடக்க முயன்ற போது தாயின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு குழந்தை திறந்தவெளி பள்ளத்தில் விழுந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com