search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilor"

    • கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.
    • அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்றகூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சிமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பா.ம.க. உறுப்பினர்கள் தனபால், குமரேசன், தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் ஆகியோர் தங்களின் வார்டுகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

    அதனைத் தொடர்ந்து பேசிய 4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாக ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் குடிநீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அதை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறி மன்ற அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    அதனைத் தொடர்ந்து தங்களின் வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தருவதாக தலைவர் உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் எழுந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என புகார் அளித்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ. 17 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டம், ரூ.17 லட்சம் மதிப்பிலான நேரடி கொள்முதல் மையம், நரசிங்கபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைப்பதற்கு பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய வார்டு பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. எனது வார்டு பகுதியில் திட்டப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்க ப்பட்டு வருகிறது. நானும் தி.மு.க. கவுன்சிலர் தான். பேரூராட்சி நிர்வாகம் என்னை புறக்கணித்து அவமானப்படுத்தி வருகின்றனர் என அழுது கொண்ேட வெளியே கோபமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார்.
    • இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல்.

    கவுன்சிலர்

    இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர்களுக்கு சொந்த மான தோட்டம் சிதம்பரபுரம் ஊருக்கு அருகே உள்ள சத்திரங்காட்டில் உள்ளது, அதில் அவர்கள் வாழைகள் பயிர் செய்துள்ளனர்.

    சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்தில் வேலிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிர் செய்யப் பட்டிருந்த 13 வாழைகளை வெட்டி அழித்துள்ளனர்.

    மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்ற கவுரி வாழைகள் அழிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாழைகளை வெட்டி அழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்து வடக்கூரை சேர்ந்தவர் நாராயணசாமி. தொழிலாளி. இவரது மகன் ராஜாமணி (வயது 30). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவடிவு என்பவருடன் திருமணம் நடந்தது. ராஜாமணி அந்த பகுதியில் பலசரக்கு கடையும் நடத்தி வந்தார். நேற்று மதியம் அவர் கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள பாளை தாலுகா போலீஸ் புறக்காவல் நிலையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை அழைத்து வர சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜாமணியை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய நிலையில் அங்கு ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாளை தாலுகா போலீசார் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஏதேனும் முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கீழநத்தம் மேலூர் மற்றும் தெற்கூர் பகுதிகளை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே ராஜாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    • போட்டியில் எட்டையாபுரம்,கோவில்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள குருமலை கிராமத்தில் பைரைட்ஸ் கிரிக்கெட் டீம் மற்றும் கிருஷ்ணா வித்தியாலயம் இனைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி கயத்தாறு அருகே உள்ள குருமலை குராமத்தில் நடைபெற்றது. போட்டியினை தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். போட்டியில் எட்டையாபுரம், தோனுகால், சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 16 கிராமங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    முதல் பரிசை மேட்டுப்பட்டி அணியும், 2-வது பரிசை குருமலை அணியும், 3-வது பரிசை கோவில்பட்டி சிக்சாக் அணி பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பால்ராஜ், குருமலை கிளைச் செயலாளர் கருப்பசாமி, ஊர் நாட்டாண்மை சேகர், பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் மற்றும் அருள் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
    • மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.

    ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

    • நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா. துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கும் முன்பு வார்டு குறைகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினர்.

    அப்போது 23-வது வார்டு தி.மு.க உறுப்பினர் வேதாச்சலம் ஒரு மஞ்சள் பையுடன் ஆணையாளர் மற்றும் தலைவர் முன்பாக வந்தார். என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, பதிலாக நிதி இல்லை என்று கூறுகின்றீர்கள். இதனால் நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.

    அதனை தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி 24-வது வார்டு தி.மு.க உறுப்பினர் மைசூர் மற்றும் 22-வது வார்டு வி.சி.க உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் அவை முன்னால் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேதாச்சலம் 13-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையை பராமரிப்பு பணியை மேற்கொள்ள அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் குட்டையை வருவாய் துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அடுத்து பேசிய 12-வது வார்டு தி.மு.க உறுப்பினர் அனுராதா சீனிவாசன் கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள மயான நிலத்தை நகராட்சி தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடிவு செய்து உள்ளதை நான் பொதுமக்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்று கூறி ஆணையாளரிடம் மனு வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
    • 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் இல.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை, குப்பை எடுத்து செல்வதற்கு போதிய வாகனங்கள் தேவை, பாதாள சாக்கடைக்காக தோண்ட ப்பட்ட ரோடுகளை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

    அதேபோல் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரிவது இல்லை அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோல் கோடை காலம் தொடங்கியதால் குடிநீர் பிரச்சினை அபாயம் உள்ளது எனவே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

    அதேபோல் மாமன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் குறைகளை கவுன்சிலர்கள் செய்து கொடுக்க முடியாமல் உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதில் அளித்து மண்டல தலைவர் இல.பத்மநாதன் பேசியதாவது:- நான்காவது மண்டல த்துக்குட்பட்ட வார்டுகளில் தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எந்தெந்த பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது என தனி அதிகாரிகளை நியமித்து அதனை கணக்கெடுத்து அது சரி செய்யப்படும். அதேபோல் நான்காவது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் ஆகையால் குடிநீர் பிரச்சினைக்கு வாய்ப்பு இருக்காது. கவுன்சிலர்கள் கூறிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்.

    மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் சமீபத்தில் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியது.

    அப்போது எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கால்வாயில் இருந்து தூர்வாரிய சாக்கடையை, வயல் தெரு பகுதியில் ரூ. 14 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சிறுவர்கள் பூங்கா பகுதியில் கொட்டி விட்டார்கள்.

    இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் குடிநீரில் சாக்கடை கலந்து ஓடுகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவர் பூங்காவில் சாக்கடை கழிவுகள் கொட்டியதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கத்தின் தலைவர் அயூப் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றாக திகழக்கூடிய ஈரடுக்கு மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் போதிய வெளிச்சம் தராததின் காரணமாக பாலம் இருட்டாகவே காட்சியளிக்கிறது. கம்பீரமாக காட்சியளிக்க வேண்டிய பாலம் பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதில் பயணிக்கின்ற வாகனங்கள் அதிலும் குறிப்பாக 2 சக்கர வாகனங்கள் பாலத்திலுள்ள குண்டு குழிகளை கவனிக்காமல் அதில் விழுந்து நிலை தடுமாறி செல்லும் நிலையும் உள்ளது.

    நல்ல வெளிச்சம் தரும் கூடுதல் வெளிச்சம் கொண்ட விளக்கினை பொருத்திட ஆவண செய்ய வேண்டும். மேலும் பாலத்தில் சில இடங்களில் நீண்ட இடைவெளி விட்டு மின் கம்பங்கள் உள்ளது.

    அதையும் கண்டறிந்து அந்த இடத்திற்கு கூடுதல் மின் கம்பங்களை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×