என் மலர்
நீங்கள் தேடியது "Resignation"
- வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
- தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.
திருப்பூர்:
ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.
வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக என அ.தி.மு.க. குழு தலைவர் சோலைராஜா பேட்டியளித்துள்ளார்.
- உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை
உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகர சபை குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சோலைராஜா கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம். இன்று உள்ளாட்சித் தினத்தில் மாநகர சபை குழு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 10 பேர் குழு பட்டியல் கேட்கப்பட்டன.
நாங்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவரை இந்த பட்டியலில் உறுப்பினராக சேர்த்து ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் நாங்கள் அளித்த அந்த 10 பேர் குழு வில் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதம் 5 பேர் தி.மு.க.வை சேர்ந்த வட்ட செயலாளர், ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றும் தி.மு.க.வினர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இவர்களுடன் சேர்ந்து எப்படி செயல்படமுடியும்?
எங்கள் வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்கின்றனர். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாநகர சபை குழுவிலும் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திமுகவினரே சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி நியாயமாகும்.
ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கின்றது. வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம். ஆனால் அதற்கு முறைப்படியான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
தெருவிளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இப்படி செயல்படாத மாநக ராட்சியில் கவுன்சிலராக இருப்பதைவிட இந்த பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.
எனவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் எதற்காக இருக்க வேண்டும்?
தி.மு.க.வினர் தொடர்ந்து பழிவாங்கும் போக்கில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மதுரை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. பணியே நடக்காத வார்டுக்கு குழு ஒரு கேடா? செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முன்னதாக மதுரை மாநகராட்சி ஆணையாளரை நாங்கள் சந்தித்து பேச உள்ளோம்.அவரிடம் நாங்கள் அளித்த மாநகர சபா குழு பட்டியலின்படி மாநகர சபை குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் உடனிருந்தனர்.
- அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
- கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.
மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-
நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.

தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.
பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.
கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.



எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. #CKKumaravel #MNM #KamalHaasan
ஈரானின் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வந்தவர் முகமது ஜாவத் ஷாரீப் (வயது 59). இவர் நேற்று முன்தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், “பதவியில் தொடர முடியாததற்கும், எனது பதவி காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என குறிப்பிட்டார்.
எனினும் முகமது ஜாவத் ஷாரீப்பின் ராஜினாமாவை அதிபர் ஹாசன் ருஹானி ஏற்றுக்கொண்டாரா? அல்லது நிராகரித்தாரா? என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஐ.நா.வுக்கான ஈரான் தூதராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப்பை கடந்த 2013-ம் ஆண்டு வெளியுறவு மந்திரி பொறுப்புக்கு அதிபர் ஹாசன் ருஹானி நியமித்தார்.
2015-ம் ஆண்டில் ஈரானுக்கும், பிற சர்வதேச நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன்படிக்கை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் முகமது ஜாவத் ஷாரீப் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Iran #MohammadJavadZarif #Resignation

பா.ஜனதா மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் மந்திரி பிரதீப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு இறுதி கெடு விதித்தனர். மந்திரியை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #Congress #BJP #PradeepMaharathy
உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, புதிய பிளெமியம் கூட்டணி திடீரென வாபஸ் பெற்றது.

இதற்கிடையே அகதிகள் குறித்த ஐநா ஒப்பந்தத்திற்கு எதிராக பிரசல்ஸ் நகரில் சமீபத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றபோது மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். அதன்பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மைக்கேல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து மன்னர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும் வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரை பதவியில் இருக்குமாறு பிரதமர் மைக்கேலை மன்னர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BelgiumPM #CharlesMichel