என் மலர்

    நீங்கள் தேடியது "Senkottai"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது.
    • அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்த கரடி

    குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் மேக்கரை வனச்சரக உதவி அலுவலர் அம்பலவாணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ராஜபுரம் காலனியில் முகாமிட்டனர். அப்போது அங்கிருந்த குளத்தின் அருகே 100-நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிலர், கரடியை பார்த்ததாக வனத்துறை யினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி ஆய்வு செய்ததில் ராஜபுரம் காலனி பகுதியில் கரடியை கண்டறிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து கரடியை அங்கிருந்து ஓட செய்தனர். அதனை பண்பொழி திருமலை கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாடான 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்' பெருவாரியான இளைஞர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு தகுதியான இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், வேல்முருகன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், கார்த்திக், ரவி, முத்து குட்டி சேவக பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது.
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவி நயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமை ந்துள்ளது மேக்கரைக்குளம். இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அச்சன்புதுார் பேரூராட்சிமன்ற தலைவா் டாக்டா் சுசிகரன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலத் தலைவா் கந்தசாமி பாண்டி யன், பேரூர் செயலாளா்கள் முத்துக்குட்டி, கார்த்திக்ரவி, முன்னாள் பேரூர் செயலாளா் முத்தழகு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவா் ஞானராஜ் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மேக்கரை கிளை செயலாளா் செய்யதுஉசேன், வார்டு செயலாளா்கள் சின்னக்கனி, ராசையா, விவசாயிகள் ஆறு முகப்பாண்டி, முகம்மது பாரூக் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, ஜெயலலிதா பேரவை செயலாளர், ஆர்.பி.உதய குமார் தலைமையிலும், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன் தாஸ்பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும், புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செய லாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமாஅத் தலைவா் அகமது மீரான் தலைமை தாங்கினார்.கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவா் அப்துல்ரஷீத் முன்னிலை வகித்தார். வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து வல்லம் ஜூம்மா மஜீத் பள்ளிவாசல் தலைமை இமாம் சுல்தான் ஷிபா மெடிக்கல் சென்டரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாமை குற்றாலம் முத்துநகர் அரிமா சங்க பட்டயத்தலைவா் சண்முகநாதன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை கண் மருத்துவா் அபினயா தலைமையில் மருத்துவ குழுவினா் இலவச கண்பரிசோதனை மற்றும் மருந்து ,கண்கண்ணாடி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். நிகழ்ச்சியில் முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் மனோ, ஹசீனா உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். ஷிபா மெடிக்கல் சென்டர் நிர்வாகி பீர் முகம்மது நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை சரிசெய்ய போலீசார் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது.

    போக்குவரத்து நெரிசல்

    கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்-சாண்ட் மணல், ஜல்லி கற்கள் என அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2 மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது.

    இதனை சரிசெய்ய போலீசார் போராடி வரும் நிலையில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • கருப்பசாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைத்தொடா்ந்து அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகள் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
    செங்கோட்டை:

    கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக செங்கோட்டை நகராட்சியில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் ஏற்பாட்டில் எளிய முறையில் பயிற்சியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார இறுதி நாளான சனிக்கிழமையில் இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு வாணியர் சமுதாய மண்டபத்தில் நடைபெறுகிறது. 

    இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பினை நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் தொடங்கி வைத்தார். இவர்களுக்கு பயிற்சியாளர் ராஜா பயிற்சி அளித்தார். இதில் செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    நெல்லை:

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும்  தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர் ரெயில்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு 9.05 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

    இதேபோல் நெல்லை-செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில்(06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.

    இதேபோல் மறுமார்க்கமாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில்(06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில்களில் 10 பொது பெட்டிகளும், 4 சிலீப்பர் பெட்டிகளும் என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

    இதில் நெல்லை-செங்கோட்டை மாலை ரெயில் நாளை முதலும், செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(06674) காலை 9 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மாலையில் 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் அந்த ரெயில்(06677) இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் போய் சேருகிறது. இந்த 2 பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print