search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே வெள்ளசேத பகுதிகளை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்
    X

    வெள்ளசேத பகுதிகளை எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்ட காட்சி.

    செங்கோட்டை அருகே வெள்ளசேத பகுதிகளை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது.
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவி நயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமை ந்துள்ளது மேக்கரைக்குளம். இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அச்சன்புதுார் பேரூராட்சிமன்ற தலைவா் டாக்டா் சுசிகரன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலத் தலைவா் கந்தசாமி பாண்டி யன், பேரூர் செயலாளா்கள் முத்துக்குட்டி, கார்த்திக்ரவி, முன்னாள் பேரூர் செயலாளா் முத்தழகு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவா் ஞானராஜ் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மேக்கரை கிளை செயலாளா் செய்யதுஉசேன், வார்டு செயலாளா்கள் சின்னக்கனி, ராசையா, விவசாயிகள் ஆறு முகப்பாண்டி, முகம்மது பாரூக் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×