search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, ஜெயலலிதா பேரவை செயலாளர், ஆர்.பி.உதய குமார் தலைமையிலும், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன் தாஸ்பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும், புளியரையில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செய லாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×