search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self immolation"

    • ராஜபாளையம் அருகே தற்கொலை செய்தவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் முருகனின் உடலை உறவினர்கள் எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த நபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்ததாக உறவினர்கள் சேதுராமன், வீரராஜ், போஜராஜன், வெங்கட்ராமன், கோபால், சங்கரலிங்கம் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நபர் பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.வி. சேனல் ஒன்று கூறும்போது, "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கை நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் கூறிய பின்னர் அந்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.

    முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.

    ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவளக்குப்பம் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே ஆண்டியார்பாளையம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது57). பிளம்பராக வேலைசெய்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் ஒரு மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதற்கிடையே வீரப்பன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி ஜெயா கண்டிக்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் நேற்றும் வீரப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி ஜெயா மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்று வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்தால் திருமணத்தை எப்படி நடத்துவது என்று கண்டித்தார்.

    இதையடுத்து வீரப்பன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி ஜெயா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி வீரப்பன் தீவைத்து கொண்டார்.

    உடல் முழுவதும் தீபரவியதால் வலியால் வீரப்பன் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்து வீரப்பனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காதல் தோல்வியால் தனியார் கம்பெனி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலாஜி (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் பாலாஜி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் பாலாஜி மனமுடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது அவர் தான் காதலித்த பெண்ணுக்கு செல்போன் மூலம் நான் வாழ விரும்பவில்லை. சாகப்போகிறேன் என்று எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.

    பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்திக் அரவிந்த் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள காலி மனையில் வைத்து பாலாஜி விஷத்தை குடித்தார். மேலும் தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டார். உடனே அவரது நண்பர் அவரை காப்பாற்றி அவருக்கு அறிவுரை கூறினார். பின்பு பாலாஜி அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற அவர் தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார். 

    இதில், அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாலாஜியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.அப்போது காதல் தோல்வியால் தீக்குளித்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
    மயிலாடுதுறையில் மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேதன் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கொத்தனார். இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுரேஷ், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வாராம்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் குழு நிறுவனத்திடம் லலிதா ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே கணவர் சுரேசுக்கு , கடந்த சில நாட்களாக வேலை சரிவர இல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் மகளிர் குழுவுக்கு கட்ட வேண்டிய கடன் தவணையை லலிதாவால் கட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மகளிர் குழுவை சேர்ந்த சிலர் , லலிதா வீட்டுக்கு வந்தனர். கடன் தவணை பணம் கட்டாததால் லலிதாவை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

    பிறகு அவரை வீட்டு வாசலில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது லலிதாவை போட்டோ எடுத்த போது அதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததால் அவர் மிகவும் அவமானம் அடைந்தார்.

    தாய் லலிதாவை இழந்து தவிக்கும் குழந்தைகள்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லலிதா, அதே பகுதியில் உள்ள தனது தாய் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி லலிதாவின் தாய் முருகேஸ்வரி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகளிர் குழு கடனுக்காக அவமானப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா தற்கொலை செய்து கொண்டதால் அவரது 3 வயது மகளும், 6 மாத ஆண் குழந்தையும் அனாதையாகி விட்டனர். தாயை இழந்த 2 குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.
    காவேரிப்பட்டிணம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே முண்டகண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (25). டிராக்டர் டிரைவரான இவருடைய தந்தையும், தாயும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர் தனது பாட்டி சகுந்தலா வீட்டில் வளர்ந்து வந்தார்.

    அருள் தனது உறவினர் மகளான சத்யா என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சத்யா 3 மாத கர்ப்பிணியான நேற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது சகுந்தலா வீட்டில் உள்ள வேலைகளை செய்ய சொல்லி திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட சத்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு உடனே கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இரவு 11 மணியளவில் சத்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மாகி 7 மாதங்கள் ஆன நிலையில் சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருமணமாகி 7 மாதங்களில் கர்ப்பிணியான சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாழப்பாடி அருகே தீக்குளித்த இளம்பெண் சாவு மாமனார் வீட்டிற்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் சோகம்

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி, குரும்பர் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி ரேஷ்மா (24). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சதாம் உசேன் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாமனார் வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவர் அங்கேயே தங்கி இருந்தார்.

    கடந்த 12-ந்தேதி பெற்றோர், ரேஷ்மாவிடம், நீ அதிக நாட்களாக இங்கு தங்கி இருக்காதே, மாமனார் வீட்டில் தங்குவதுதான் நல்லது என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இதில் மனம் உடைந்த ரேஷ்மா பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ரேஷ்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்த ரேஷ்மாவுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால் வாழப்பாடி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார்.

    ஓசூர் அருகே தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சர்ஜாபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான லே-அவுட் உள்ளது. இந்த லே-அவுட்டில் தைல தோப்பும் உள்ளது. நேற்று மாலை அந்த தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

    அவரது உடல் அழுகியும் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பாகலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது வாலிபர் காணாமல் போனாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக பகுதியில் கொலை செய்யப்பட்டு வாலிபர்கள் பிணம் ஓசூர் பகுதியில் வீசப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தைல தோப்பில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வில்லியனூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தச்சு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பாரதி நகர் ஆனந்தபுரம் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் மோகன். (வயது 40). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி.

    மோகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோகனுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்தார். அவரது மனைவி ஜெயந்தி பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

    அப்போது மோகன் வலி தாங்க முடியாமல் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள வாச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 26). இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ராஜேஷ் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த ரேகா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசவில்லை.

    மிகவும் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீக்குளித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் ரேகா மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் ரேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரேகாவின் தாயார் வெள்ளையம்மாள் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலையில் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிகால் நகரில் உள்ள டாஸ்மாக் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது.  இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும். அவரை கொலை செய்து விட்டு எரித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    லாலாப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கருகினார்.
    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை  அருகே உள்ள கொம்பாடிபட்டியை சேர்ந்தவர் அருள்சக்தி. இவரது மனைவி மைதிலி (வயது 37). இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். அருள்சக்தி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மைதிலியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவும் அருள்சக்தி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மைதிலி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மைதிலியை காப்பாற்றி முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் அலறினர்.

    இருவரதும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். சக்திவேல் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×