search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman suicide"

    • கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
    • வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கோமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவர் அதே பகுதியை சேர்ந்த கோமதி (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கோமதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கிஷோர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது போதையில் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    கடந்த 17-ந் தேதி மீண்டும் கிஷோர் மது போதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

    வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    காஞ்சிபுரம் அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (25). இவரது கணவர் கார்த்திக் (30). இவர் கட்டிடத் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் அனைவரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உள்ள மின் விசிறியில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திவ்யாவின் தந்தை வேலுமணி மாநகர போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    இதேபோன்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகு (30). திருமணமாகாதவர். இவர் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டிணம் அருகே காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே முண்டகண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (25). டிராக்டர் டிரைவரான இவருடைய தந்தையும், தாயும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர் தனது பாட்டி சகுந்தலா வீட்டில் வளர்ந்து வந்தார்.

    அருள் தனது உறவினர் மகளான சத்யா என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சத்யா 3 மாத கர்ப்பிணியான நேற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது சகுந்தலா வீட்டில் உள்ள வேலைகளை செய்ய சொல்லி திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட சத்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு உடனே கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இரவு 11 மணியளவில் சத்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மாகி 7 மாதங்கள் ஆன நிலையில் சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருமணமாகி 7 மாதங்களில் கர்ப்பிணியான சத்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஈரோட்டில் திருமணமான 2 வருடத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஜேசிபி டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 35).

    தமிழ்ச்செல்வனுக்கும் கோபிகாவும் கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோபிகா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.

    கீழ்ப்பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர் குடும்பத்தினர் தூங்கினர்.

    இந்நிலையில் தமிழ்ச்செல்வன் காலை மனைவியை பார்க்க மேல் அறைக்கு சென்றார். அப்போது அறையில் மனைவி கோபிகா தூக்குப் போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆவதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் பெரியூரைச் சேர்ந்தவர் சண்முகம்(27). கட்டிட மேஸ்திரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாள் (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷிதா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அங்கம்மாள் மீண்டும் கர்ப்பமானார்.  4 மாத கர்ப்பிணியான அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், பாப்பாரப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கம்மாள் என்ன? காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் சப்-கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    மதுரவாயலில் கர்ப்பிணி பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயல் சக்கரபாணி நகரை சேர்ந்தவர் கிரீஷ். இவரது மனைவி ரீனா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் ரீனா 3 முறை கர்ப்பமானார். எனினும் குழந்தை கரு கலைந்தது. தற்போது 4-வது முறையாக அவர் கர்ப்பமாகி இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்றிருந்த போது குழந்தை கருவிலேயே இறந்து இருப்பது தெரிந்தது.

    குழந்தையின் கருவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ரீனா மனவேதனை அடைந்தார். அவருக்கு கணவர் ஆறுதல் கூறி வந்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ரீனா வீட்டில் உள்ள மின்விசியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×