search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Suicide"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    • மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு மதுநிஷா (12), தருணிகா(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் விஜயலட்சுமி அவரது அண்ணன் ராமசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பினார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பமில்லை. மன்னிச்சிடுங்க என்று தெரிவித்து இருந்தார். இதை அடுத்து விஜயலட்சுமி தனது 2 மகள்களையும் மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர் குருமந்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் என்ற பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் மொபட்டை நிறுத்திவிட்டு தனது 2 குழந்தைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

    விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை தேடினர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் மொபட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் வாய்க்காலில் அவர்களை தேடினர். அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிபாளையம் என்ற பகுதியில் விஜயலட்சுமியின் மூத்த மகள் மதுநிஷா கரையோரம் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தார். அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் தாய் மற்றும் மற்றொரு மகளை தேடினர்.

    அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கப்பட்டார்.

    தொடர்ந்து அவரது 2-வது மகள் தருணிகாவை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பசீர்அகமது. இவரது மகள் ஷபீனா (16). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஷபீனா மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் ஷபீனாவை அடிக்கடி டி.வி. பார்க்காதே என்று கண்டித்தும், நன்றாக படி என்றும் அறிவுரை கூறி வந்தனர்.

    சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது தான் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.
    • இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் தந்தையும் இறந்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி முத்துலட்சுமியையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். முத்துலட்சுமிக்கு அவரது அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணனும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சாந்தி கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 60). இவர்களுக்கு அமுதா (30), பூவிழி (28) என 2 மகள்கள் உள்ளனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சின்னசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனன்யா (வயது 9) என்கிற மகள் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    அமுதா பெருந்துறை அடுத்த சரலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவரது மகள் தனன்யா அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் மல்லிகாவின் 2-வது மகள் பூவிழி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகா அவரது மகள் அமுதா மற்றும் தனன்யா ஆகியோர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தூங்க சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டுக் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மல்லிகா வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    பின்னர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மல்லிகா தனியாகவும் மற்றொரு அறையில் அமுதா மற்றும் தனன்யா இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சத்தியமங்கலம் அருகே சரியாக பரீட்சை எழுதவில்லை என்ற மனவேதனையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியண்ணன். இவரது மகன் கவுதம் (வயது 17). கவுதம் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

    கவுதம் தனது தந்தையிடம் பிளஸ்-2 பொதுத் தேர்வு தான் சரியாக எழுதவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு தந்தை காளியண்ணன் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காளியண்ணன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். வீட்டில் கவுதம் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த கவுதம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.

    வீட்டுக்கு திரும்பி வந்த காளியண்ணன் கதவை தட்டினார். ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த காளியண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தார். அப்போது கவுதம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கவுதமை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் திருமணமான 2 வருடத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஜேசிபி டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 35).

    தமிழ்ச்செல்வனுக்கும் கோபிகாவும் கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோபிகா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.

    கீழ்ப்பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர் குடும்பத்தினர் தூங்கினர்.

    இந்நிலையில் தமிழ்ச்செல்வன் காலை மனைவியை பார்க்க மேல் அறைக்கு சென்றார். அப்போது அறையில் மனைவி கோபிகா தூக்குப் போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆவதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் போலீஸ்காரர் விஷம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.

    ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.

    2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்ட அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுந்தப்பாடி அருகே வீட்டு அடமான பத்திரத்தை மீட்க முயாடிததால் மனவேதனை அடைந்த தொழிலாளி விணம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (37). மனைவி பெயர் சாந்தி (34) இவர்களுக்கு அஞ்சலி, பிரவீன் ஆகிய மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    சரவணன் சொந்த ஊர் செந்தாம்பாளையம் என்றாலும் தற்போது ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வசித்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    ஈரோடு மார்கெட்டில் பூண்டு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணி செய்கிறார். மனைவி சாந்தி தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் தையல் வேலைக்கு செல்கிறார்.

    சரவணன் ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவானது. பணத்திற்காக செந்தாம்பாளையத்தில் உள்ள சொந்தவீட்டை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

    கடந்த சில நாட்களாக வீட்டை மீட்க முடியவில்லையே என மன வருத்தப்பட்டு வந்த சரவணன் மனைவியிடம் பணத்தை புரட்டி வீட்டு பத்திரத்தை மீட்டு வருவதாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செந்தாம்பாளையம் வந்தார்.

    சரவணனால் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்தது. மீதி தொகை புரட்ட முடியாமல் வேதனை அடைந்த சரவணன் தனது மனைவி சாந்திக்கு போன் செய்து தன்னால் பணம் புரட்ட முடியவில்லை. செந்தாம்பாளையத்திற்கு கிளம்பி வருமாறு கூறினார்.

    பிறகு வி‌ஷத்தை குடித்து விட்டு வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சரவணனை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார்.

    ஈரோட்டில் இருந்து கணவன் போன் செய்தார் என்று மகன் மகளுடன் புறப்பட்டு வந்த சாந்தி செந்தாம்பாளையம் சென்று பார்த்துவிட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கணவர் சேர்க்கபட்டிருப்பதாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

    அங்கு கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    ×