search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    சத்தியமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

    சத்தியமங்கலம் அருகே சரியாக பரீட்சை எழுதவில்லை என்ற மனவேதனையில் பிளஸ்-2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியண்ணன். இவரது மகன் கவுதம் (வயது 17). கவுதம் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

    கவுதம் தனது தந்தையிடம் பிளஸ்-2 பொதுத் தேர்வு தான் சரியாக எழுதவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு தந்தை காளியண்ணன் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காளியண்ணன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். வீட்டில் கவுதம் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த கவுதம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.

    வீட்டுக்கு திரும்பி வந்த காளியண்ணன் கதவை தட்டினார். ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த காளியண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தார். அப்போது கவுதம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கவுதமை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×