search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman suicide attempt"

    • திருமணம் ஆகாத விரக்தியில் போலீஸ்காரர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
    • போலீஸ்காரர் தீக்குளிப்பு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    மதுரையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 29). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியனில் 12-வது பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தங்கியிருந்த அறையில் மண்எண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்து அலறி துடித்த அவரை சக காவலர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியில் அவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் போலீஸ்காரர் விஷம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.

    ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.

    2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்ட அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×