search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறு ஆயுதப்படை பட்டாலியனில் போலீஸ்காரர் தீக்குளிப்பு- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    மணிமுத்தாறு ஆயுதப்படை பட்டாலியனில் போலீஸ்காரர் தீக்குளிப்பு- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • திருமணம் ஆகாத விரக்தியில் போலீஸ்காரர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
    • போலீஸ்காரர் தீக்குளிப்பு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    மதுரையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 29). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியனில் 12-வது பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தங்கியிருந்த அறையில் மண்எண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்து அலறி துடித்த அவரை சக காவலர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியில் அவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×