என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஈரோட்டில் மனைவியுடன் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி ஈரோட்டில் மனைவியுடன் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி](https://img.maalaimalar.com/Articles/2019/Feb/201902081545565170_Erode-near-Police-man-and-wife-suicide-attempt_SECVPF.gif)
X
ஈரோட்டில் மனைவியுடன் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
By
மாலை மலர்8 Feb 2019 10:15 AM GMT (Updated: 8 Feb 2019 10:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் போலீஸ்காரர் விஷம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.
2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி விஷம் குடித்ததை கண்ட அவரும் விஷத்தை குடித்து விட்டார்.
இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.
2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி விஷம் குடித்ததை கண்ட அவரும் விஷத்தை குடித்து விட்டார்.
இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)