search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram suicide"

    காஞ்சிபுரம் அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (25). இவரது கணவர் கார்த்திக் (30). இவர் கட்டிடத் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் அனைவரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உள்ள மின் விசிறியில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திவ்யாவின் தந்தை வேலுமணி மாநகர போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    இதேபோன்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகு (30). திருமணமாகாதவர். இவர் நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ×