search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love failure"

    • விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அருண்ராஜ் காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அருப்புக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது பாட்டி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

    • காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்த வர் முத்துசாமி மகன் சிவ குமார் (வயது26). இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சிவகுமார் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மனஉளைச்சல் காரணமாக நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவகுமாரின் தாய் இந்திராணி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சாதிக் உசேன்(47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்தார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாதிக் உசேன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுமைலத் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்மேனி காளிமுத்து நகரைச்சேர்ந்தவர் பால்பாண்டி (52). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஹரிகிருஷ்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்தி ஆகாஷ் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த பொருட்களை திடீரென்று அடித்து நொறுக்கினார். அப்போது வீட்டில் உடைந்து இருந்த கண்ணாடியை எடுத்து திடீரென்று தனது வயிற்றில் குத்தி கொண்டார்.
    • பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி ஆகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு சக்தி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர:

    கடலூர் கே.என்.பேட்டை சேர்ந்தவர் சக்தி ஆகாஷ் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த பொருட்களை திடீரென்று அடித்து நொறுக்கினார். அப்போது வீட்டில் உடைந்து இருந்த கண்ணாடியை எடுத்து திடீரென்று தனது வயிற்றில் குத்தி கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்தி ஆகாஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு சக்தி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த வாலிபர் சக்தி ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் உடனடியாக தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த சக்தி ஆகாஷ் தனது பெற்றோர்களிடம் சென்று நான் காதலித்த பெண்ணை பேசி திருமணம் ஏன் செய்து வைக்கவில்லை என கூறி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்த போது அங்கு இருந்த கண்ணாடி துண்டை எடுத்து குத்தி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இருந்தபோதிலும் சக்தி ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்
    • மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி/ இவரது மகன் சவுந்தராஜ்(வயது 28). இவர் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சௌந்தரராஜன் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவர் வீட்டிலும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பெண் வீட்டிலும் ஜாதகம் சரியில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட முடிவு செய்தனர்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சவுந்தர்ராஜ் தினசரி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை சவுந்தர்ராஜ் எழுதி இருப்பதும் தெரிய வந்தது 

    அதில் ''எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜாதகம் சரியில்லை என்று கூறி எனது திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இந்த உலகில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்" என எழுதி இருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தினசரி மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காதல் தோல்வியால் தனியார் கம்பெனி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலாஜி (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் பாலாஜி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் பாலாஜி மனமுடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது அவர் தான் காதலித்த பெண்ணுக்கு செல்போன் மூலம் நான் வாழ விரும்பவில்லை. சாகப்போகிறேன் என்று எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.

    பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்திக் அரவிந்த் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள காலி மனையில் வைத்து பாலாஜி விஷத்தை குடித்தார். மேலும் தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டார். உடனே அவரது நண்பர் அவரை காப்பாற்றி அவருக்கு அறிவுரை கூறினார். பின்பு பாலாஜி அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற அவர் தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார். 

    இதில், அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாலாஜியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.அப்போது காதல் தோல்வியால் தீக்குளித்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
    புதுவையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது24). அவ்வப்போது கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பகுதிநேர ஊழியராக வேலைசெய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் தொடக்கத்தில் சிலம்பரசனுடன் பேசி பழகி வந்தார்.

    நாளடைவில் இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணை கண்டித்தனர். இதனால் அந்த பெண் சிலம்பரசனுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். சிலம்பரசன் வலிய வந்து பேசினாலும் அந்த பெண் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் இவர் ஆம்பூர் சாலை- நீடராஜப்பையர் வீதி சந்திப்பில் நின்று கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டு மயங்கி விழுந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    உடுமலையில் காதல் தோல்வி அடைந்த பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை எஸ்.சி.புரம். கண்டிய கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 25). இவர் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி னார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முருகவேலுவும் ஒரு பெண்ணும் காதலித்து வந்ததும் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காதலி நினைவாகவே இருந்தார். பெண்ணின் பெற்றோரிடம் சென்று ஏன் உங்கள் பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்தீர்கள் என்று சத்தம்போட்டு புலம்பி வந்தார். இந்நிலையில் முருகவேல் இரும்பு பைபால் அடித்துக்கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    களக்காடு அருகே காதல் தோல்வியால் மன உளைச்சல் அடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 47). இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    இவரது 2-வது மகன் குமார் (18). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தனது உறவினர் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசக்கி பாண்டி தனது மகன் குமாருடன் பொங்கல் விடுமுறைக்காக சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து இசக்கி பாண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அச்சுதன் இவரது மகன் குணசேகரன் (வயது 20). கூலிதொழிலாளி. இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    பலமுறை அந்த பெண்ணிடம் தன் காதலை தெரியப்படுத்தியும் அந்த பெண் குணசேகரனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் குணசேகரன் வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்ட நண்பர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குணசேகரன் சிக்ச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஞ்சப்பட்டி அருகே உள்ளது சின்னக்கரை ஓடை. இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் வாலிபர் ஒருவர் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். எரிந்து கிடந்த வாலிபர் உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் இருந்தது.

    மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரை பிரித்து பார்த்தபோது அதில் செல்போன், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. போனில் உள்ள எண்ணை வைத்து தொடர்பு கொண்டபோது இறந்து கிடப்பது பவானி மெயின் ரோடு ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் செல்வக்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது.

    இது குறித்து செல்வக்குமாரின் அண்ணன் போலீசாரிடம் கூறும்போது, எனது தம்பி பிளஸ்-2 முடித்து விட்டு வாட்டர் பில்டர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் சோகமாக காணப்பட்டார்.

    இது குறித்து விசாரித்தபோது அவர் காதல்தோல்வி அடைந்து விட்டதாக தெரியவந்தது. இதனால் அவர் சாப்பிடாமலும், தூங்காமலும் விரக்தியுடன் காணப்பட்டார். நாங்கள் அவரை சமாதானப் படுத்தினோம். இருந்தாலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செல்வக்குமார் மாயமானார். அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், நண்பர் வீடுகளில் தேடினோம்.

    இந்நிலையில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    இது குறித்து போலீசார் கூறும்போது வீட்டை விட்டு வெளியேறிய செல்வக்குமார் இந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வரும்போது 4 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து அதில் 2 லிட்டர் பெட்ரோலை உடலை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்துள்ளார் என்று கூறினர்.

    தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த தடயங்களை சேகரித்த பின்னர் வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படும். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    செல்வக்குமார் சாவுக்கு வேறு ஏதும் காரணம் இருக்கமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

    ×