search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்த வர் முத்துசாமி மகன் சிவ குமார் (வயது26). இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சிவகுமார் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மனஉளைச்சல் காரணமாக நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவகுமாரின் தாய் இந்திராணி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சாதிக் உசேன்(47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்தார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாதிக் உசேன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுமைலத் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்மேனி காளிமுத்து நகரைச்சேர்ந்தவர் பால்பாண்டி (52). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஹரிகிருஷ்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×