search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்"

    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம்.
    கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். காலை 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பிறகும் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கவேண்டும். சூரியன் உச்சத்தில் இருக்கும் இதர நேரங்களில் இன்டோர் கேம்ஸ்களை வீட்டிற்குள்ளே விளையாட ஊக்குவியுங்கள்.

    குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்' காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.

    குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.

    கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.
    ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.
    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அதில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

    மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு திறன் கொண்டவர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியரின் ஒத்துழைப்பால் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அவர்கள் அதிக நேரம் செலவிடுவது பள்ளியில் தான். ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.

    மாணவர்களின் கவனம் சிதற இப்போது பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், ஒரு நாள் தங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாணவர்களின் நிலைப்பாட்டினை மாற்ற முடியும்.

    பிள்ளைகளின் வளர்ச்சியில், பெற்றோர்களின் பொறுப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்குப் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டும்.

    அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம், மாணவர்கள் மரியாதை கொண்டு தன்னிலை புரிந்து செயல்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. எனவே, மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமமான பங்கு உள்ளது.
    ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:
    வாழ்க்கையில் அழகிய தருணங்களை உருவாக்கும் உறவு ‘நட்பு’. ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:

    சோகமும் தேவையே:

    இளம் வயதில், நட்பின் இழப்பால் ஏற்படும் துக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நட்பின் இழப்பினால், அவர்கள் அழுவதற்கு விரும்பினாலும், பழைய விஷயங்களை அசை போட விரும்பினாலும் அதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எந்த இழப்பையும் உடனடியாக சமாளித்து வெளி வருவது கடினமானது. எனவே, அதற்கான நேரத்தை ஒதுக்கி, காத்திருங்கள். இது எதிர்காலத்தில், அடுத்த அடியை நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதை எளிதாக்கும்.

    மாற்றுப் பாதையில் மனதைத் திருப்புங்கள்:

    நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும். எதிர்மறையான எந்தக் கருத்தையும் இந்த நேரத்தில் உருவாக்காமல், அவர்களுடனே பயணிக்க முயலுங்கள்.

    அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் வகையில், சிறுசிறு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். வீட்டில், உங்களுக்குத் தேவையான தகவலை, பிள்ளைகளின் மூலம் பெறுதல், காலண்டரில் தேதி சரி செய்தல், போனில், எண்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வைப்பதன் மூலம் மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் அவர்களின் மனம் தடம் மாறாமல் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கச் செய்யலாம்.

    பேச அனுமதியுங்கள்:

    மனம் துவண்டு இருக்கும் நேரத்தில், நம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த தயக்கத்தைக் குடும்ப உறுப்பினர்கள்தான் தகர்த்தெறிய வேண்டும். நீங்களே சென்று முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். இதில், பிள்ளைகளுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், மன எண்ணங்கள் வெளிப்படுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதுடன், சரியான தீர்வு காணவும் முடியும்.

    புதிய நட்புக்கு உதவுங்கள்:

    ஒரு நட்பை இழந்துவிட்டோம் என்றால் அதனுடன் இந்தப் பயணம் முடிந்துவிடுவதில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நட்பு முறிந்தாலும், நட்புடனான பழைய நினைவுகள் என்பது என்றும் நம் மனதில் நீங்காது இருக்கும்.

    அதனுடன், நிற்காமல் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல புதிய நட்பு தேவைப்படும். இதுபோன்று புதிய நட்பை அமைக்கும்போது, பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நட்பைத் தேர்வு செய்ய உதவுங்கள். எதிர்காலத்தில், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கான சிறந்த வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
    பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கமும், தொடர்பும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளி, கணவன்-மனைவி உறவை மட்டுமில்லாமல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவையும் பாதிக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதை அதிகரிப் பதற்கான சில எளிய வழிகள் இதோ...

    முன்னுதாரணம்: குழந்தைகள் பெற்றோரின் பிம்பங்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் செயல் எப்படி உள்ளதோ, அதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடுகளும் வெளிப்படும். பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குழந்தைகள் முன்னால் காண்பிக்கக்கூடாது. நமக்கு இருக்கும் வேலைப்பளுவை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடலாம். இது அவர்களின் மனநிலையைச் சீராக்கும்.

    மனம்விட்டு பேசுதல்: பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே, தகவல் பரிமாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் விட்டுப் பேசுதல் முக்கியமானது. குழந்தைகள் நமது பேச்சை கவனிப்பதற்கு ஏற்றவாறு, நாம் பேசும் முறையைச் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் வார்த்தையை விட, உடல் மொழியைத்தான் குழந்தைகள் அதிகமாக கவனிப்பார்கள். உளவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பேசும்போது வார்த்தை 7 சதவீதமும், உடல்மொழி 55 சதவீதமும், குரலின் சத்தம் 38 சதவீதமும் இருக்க வேண்டும்.

    குழந்தைகளை பேச வைத்தல்: பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி.

    நேரத்தைத் திட்டமிடுதல்:  ஒரு நாளில், சில மணி நேரத்தைக் குடும்பத்திற்காக மட்டும் ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், வெளி வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். குழந்தைகளும் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்ப்பார்கள். தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். இந்த நேரத்தை அனைவரும் வெளிப்படையாகவும், தெளிவாகவும், மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக மாற்றுங்கள்.

    நடைமுறையை உருவாக்குதல்: அலுவலக பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதுபோல், குடும்பத்தின் நடைமுறைக்கும் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும். படுக்கைக்கு செல்வது, உணவுக்கான நேரம், விளையாட்டு நேரம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது என, முறைப்படுத்த வேண்டும்.

    பாராட்டுங்கள்: குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான தொடர்பை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் உதவும் ஒரே வழி ஒருவருக்கொருவர் தொடர்ந்து பாராட்டி ஆதரவளிப்பதுதான். குழந்தைகள் சவாலான விஷயங்களைச் சந்திக்கும்போது, இந்த பழக்கம் அவர்களை ஊக்குவிக்க உதவும்.
    ×