என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Study"

    • மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
    • நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    பகலில் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய `மெண்டலியன் ரேண்டமைசேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பகல் நேர குட்டி தூக்கம், வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.

    இதே போல வேறொரு ஆய்வில், `டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் நடைபெற்றது. ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில் ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

    இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி, ஒரு இரவு வழக்கமான சாதாரண தூக்கம் மட்டுமின்றி பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை.
    • சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வீடுகளில் பொதுவாக கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும் இருக்கும். கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த பாராசைட்டை சுமக்கின்றன.

    சென்னையில் உள்ள மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது.

    இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. அவ்வாறு மனித உடலில் தொற்றிக் கொள்ளும் இந்த புழுவின் முட்டைகள் மனிதர்களின் கல்லீரலில் சென்று குடியேறி விடுகிறது. இதனால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் பெரிதாகுவது, காய்ச்சல், சோர்வு வரை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.

    இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள. ஏனெனில் கல்லீரலில் இருந்து 'பயாப்சி' எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்கிறார்கள்.

    ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

    பொதுவான அறிகுறியாக காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
    • எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.

    இருப்பினும் தற்போது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் பாதி வழக்குகள் உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் பதிவாகின்றன என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வு காட்டுகிறது.

    தற்போது, குளோபல் ஹெல்த், பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 1993 இல் 26% ஆக இருந்த குறைந்த எடை குழந்தை பிறப்பு விகிதம், 2021 இல் 18% ஆகக் குறைந்துள்ளது.

    மாநில வாரியாக, 1993-99ல் 25% ஆக இருந்த சராசரி, 2006ல் 20% ஆகவும், 2021ல் 16% ஆகவும் குறைந்துள்ளது.

    2019-21 ஆம் ஆண்டில் குறைந்த எடையுடன் பிறந்த 42 லட்சம் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி (47%) மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பிறந்துள்ளன.

    1993 இல் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 48% ஆகவும், 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

    மேலும் பிறக்கும் போது எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.

    முறையான கல்வி இல்லாத, ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த எடையுடனும், சராசரி அளவை விட சிறியதாகவும் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  

    • ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
    • அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

     இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.

    ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    • 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
    • முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.

    'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
    • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

    ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

    இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

    அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அவ்வபோது மழை பெய்துவருவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

    இதனிடையே கொள்ளிடம் வட்டாரம் பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீர் வடிந்த பின்னர் உரிய கணக்கீடு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசா யிகளிடம் உறுதியளித்தனர். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் உடனி ருந்தார்.

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    • மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
    • நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.

    • ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை பூா்த்தி செய்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் 2022-23 ம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகலாம்.

    இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, போன் நம்பா்:044-29515942 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர்.
    • கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம், நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேருந்து நிலையம், மற்றும் பரமத்தியில் நாமக்கல் மோட்டார் வாகன அலுவலர் முருகன் மற்றும் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம்,நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    மேலும் இரவு நேரத்தில் பரமத்தி நகருக்குள் பேருந்துகள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது பரமத்தி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் அந்தந்த பேருந்துகளுக்கென வாங்கிய உரிமம் அடிப்படையில் அந்தந்த வழித்தடங்களில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×