என் மலர்

    நீங்கள் தேடியது "study"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.

    ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.
    • நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு மீனவ கிராமங்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் ராஜேஷ் தலைமையில், 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதற்றமான பகுதிகள் எவை? அடிக்கடி பிரச்சினை, கலவரம், சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கள் உள்ளதா ? என்பன உள்ளிட்ட தகவல்களை துணை கமாண்டர் ராஜேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்திலிருந்து வெளிப்பாளையம் காவல் நிலையம் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி அணி வகுப்புடன் சென்றனர்.

    இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு,சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் என உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஆய்வறிக்கையை தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க உள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    பொன்னேரி:

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள், கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடம் பழுதடைந்து, மின்விசிறி இயங்காமலும் டியூப்லைட் எரியாமலும் தண்ணீர் வசதி இன்றி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இரு்நததால் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரடியாக விவசாயிகளின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா ஆய்வு செய்து தோட்டக்கலை புதிய தொழில்நுட்பம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசர், மரூர், முட்டியம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சீர்பாத நல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி செய்து வரும் காளான் வளர்ப்பு குடில், கடுவனூர் கிராமத்தில் புதிய பரப்பு விரிவாக்கம், பழப்பயிர் இனத்தின் கீழ் பாக்கு நடவு செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக பப்பாளி, வாழை நடவு தோட்டத்தினையும், உயர்ரக தோட்டக்கலை தொழில்நுட்ப சாகுபடி இனத்தின் கீழ் துறையின் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வை மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூடலூர், மருர், சீர்பாதநல்லூர் ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் தமிழக அரசின் மூலம் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் திட்ட இனத்தின் வாரியாக பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகள் மற்றும் அக்கிராம பொறுப்பு அலுவலரிடம் அடுத்த கட்ட பணிகளான தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு செம்மைப்படுத்தும் நோக்கில் விருப்பமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் விரும்பும் சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இணையத்தில் பதிவு மற்றும் பணி ஆணை வழங்கி சொட்டுநீர் பாசன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து விவசாயிகளுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பாலா, தேக்கு உள்ளிட்ட ஏனைய பல்லாண்டு பழ பயிர்கள் மற்றும் மர பயிர்களை நடவுப் பணிகள் , பயிர் பராமரிப்பு பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளுமாறு மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட மானியங்கள் பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ரிஷிவந்தியம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன் தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜேஷ், சீனிவாசன், வேலன் வேளாண்மை உதவி அலுவலர் நசுருல்லா, அப்பாஸ் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து தேர்ச்சி சதவீதம் உயரும்.
    • ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தில் ரூ.48 இலட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளப்படுவதை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, புளியந்துறை ஆகிய பகுதிகளில் ரூ.48 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியினை பார்வையிட்டு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, தினசரி பாடங்களை அன்றைக்கே நிறைவு செய்யும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.

    அப்போது தான் மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து, தேர்ச்சி சதவீதம் உயரும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர், மகேந்திர ப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டப்பட்டு வருவதையும், புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மகேந்திர ப்பள்ளி மற்றும் புளியந்துறை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி சிவபாலன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூரணசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை சரிபார்த் தார்.
    • விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தாலுகா வில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் நேற்று விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு செய்தார். இதில் கலை ஞர் மகளிர் உரிமை திட்ட த்தின் கீழ் ரூ. 1000 பெற விண்ணப்பத்தவர்க ளின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண் உள்ளிட்டவை களை கலெக்டர் சரிபார்த் தார். ஆய்வின் போது தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், வருவாய் ஆய்வா ளர்கள் தெய்வீகன், ராஜேஷ், வி.ஏ.ஓ. க்கள் அபி ராமி, விண்ணரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு நடத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை யில், குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடி னார். தொடர்ந்து மதுரை யானைமலை ஒத்தக்கடை யில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை பார்வை யிட்டனர்.

    பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் கனிமொழி கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிேறாம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் சங்கீதா, நாடாளுமன்ற இயக்குநர் கல்யாண சுந்தரம், நாடாளுமன்ற நிலைக்குழு அலுவலர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள், இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலையான இங்கு உரிய பராமரிப்பு இல்லாமல் சாதனங்களை பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏதேனும் திடீர் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என கேட்டு எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டும் இன்றி இது போன்ற அஜாகரதியான சூழ்நிலையில் தொழிற்சாலை இயங்கலாமா? என சரமாரியாக கேள்வியும் எழுப்பினார்கள்.

    மேலும் தொழிற்சா லைகளை சரியான முறையில் பராமரித்து உயிர் பலி ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதி மொழி குழுவினரால் மீண்டும் சில நாட்களில் திடீர் ஆய்வு செய்யப்படும். அப்போதும் இது போன்ற நிலை நீடித்தால் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஏதேனும் தொழிற்கூடங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடங்கினால் உரிய அனுமதி பெற்று தொடங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
    • 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னோட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,

    1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்ட ச்சத்து நிலைபாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தினை அறிவித்து செயல்படு த்தினார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராய ன்மலை வட்டாரத்திற்குட்ப ட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 14 அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 8 வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 638 அரசுப்பள்ளிகளில் வருகின்ற 25-ந்தேதி முதல் இத்திட்டம் விரிவுப்படு த்தப்படவுள்ளது.

    இத்திட்டம் விரிவுபடுத்துவதற்கான முன்னோட்டமாக தியாகது ருகம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) நடத்தப்பட்டது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு சமைக்கப்பட்டு சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டு மென தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலை வர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

    மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp