search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scholarships"

    • மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
    • யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச்சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாண விகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒருவருக்கு  ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail,com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது விண் ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) முதல்-அமைச்சரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவி களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க் கைக்கான வலைத்தளமா னது (www.pudhumaipenn.tn.gov.in) 4.9.2023 அன்று தொடங் கப்பட உள்ளது.

    இந்த வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக 4.9.2023 முதல் பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான வர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூல மாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 4.9.2023 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண், வங்கி கணக்கு எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டது), (மாற்றுச் சான்றிதழ்) சமர்ப்பிக்க வேண்டும்.மேல் படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மூலம் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

     ஈரோடு:

    நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சார்ந்த 3093 மாணவ- மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம்வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்விஉதவித்தொகை வழங்கப்படும். தேசிய த்தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்12-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு வரும 29.09.2023 அன்று நடை பெறும்.

    விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணை க்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணைய தளங்களில் வெளியிட ப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

    • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம்.
    • ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக முதல்வரின், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப் பிக்கலாம். அந்த வகையில், ஒவ் வொரு மாதமும் 2-வது செவ்வாய் கிழமைகளில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இயங்கும், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொள்ளலாம். முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப் பித்து பயனடையலாம். ரூ.1,500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் அசல் மற்றும் நகல், 10-ம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு), பாஸ் போர்்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார்.

    • சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
    • இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.

    இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.

    பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
    • புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் நலிவடைந்ததால் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அபிராமம்

    தமிழகம் முழுவதும் ஜிம்ப்ளா மேளத் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் மேளம் என்றாலே ஜிம்ப்ளா மேளம்தான் என்ற பெயர் உண்டு. கோவில் திருவிழாக்கள், எருதுவிடும் திருவிழா, இல்ல வைபவங்கள், துக்க நிகழ்ச்சிகள், கலை இரவு போன்றவற்றில் இந்த வகை மேளம் பயன்படுத்தப்பட்டது.

    காலப்போக்கில் இந்த மேளத்துக்கு மவுசு குறைந்துவிட்டது. இந்த தொழில் செய்து வந்த மேள கலைஞர்கள் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு கூட சிரமப்படுகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ஜிம்ப்ளா மேளக்கலைஞர் ராசு கூறியதாவது:-

    எங்களது பூர்வீக தொழில் ஜிம்ப்ளா மேளம் அடிப்பதாகும். தமிழகம் முழுவதும் நாங்கள் பரவலாக இருந்து வருகிறோம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருந்து ஜிம்ப்ளா மேளத்தொழில் செய்து வருகிறோம். ஆரம்பகால கட்டத்தில் தென்மாவட்டங்களில் எல்லா விழாக்களுக்கும் ஜிம்ப்ளா மேளம்தான் தேவைப்பட்டது. காலப்போக்கில் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் டிரம் செட், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் என நவீன கருவிகளுக்கு மக்கள் மாறிவிட்டனர். இதனால் பாரம்பரிய ஜிம்ப்ளா மேளத்திற்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது. இதனை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான மேள கலைஞர்கள் வேலையிழந்து வாடும் நிலை உள்ளது.

    இளமை காலங்களில் எப்படியும் பிழைத்துக்கொள்ளும் நாங்கள், வயதானவுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். அழிந்துவரும் இந்த ஆதிகாலத்து கலையை மீட்டெடுத்து ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
    • மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 - 23ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி செய்ததற்கான ஆதாரம் மற்றும் தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

    இதற்காக, www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட தமிழ் அறிஞர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 608 ல் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    • மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
    • மாணவர்கள் நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் விளிம்புநிலை குடும்பத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொ கை வழங்கம் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகயைில்:-

    மாணவர்கள் வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக தான் மாறுவீர்கள்.

    எனவே, நேர்மையான எண்ணத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.

    மேலும், நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

    கல்வி உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    ×