search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athletes"

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    • சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக இளைஞர்கள், மாண வர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தி.மு.க. மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.

    இதுபோல் அபிஷேகப்பாக்கம் எங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி வீரர்களுக்கு சீருடை, கிரிக்கெட் மட்டை, ஹெல்மட் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜாராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில அமைப்பாளர் ரவி, ஆதிதிராவிடர் மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராஜவேல், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பலராமன், சாந்தபாலன், செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணை ப்பாளர்கள் செல்வம், விமல்ராஜ், தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செந்தில், மணி, அருண், லிங்கேஸ்வரன், ராஜா, தனசேகரன், இளவயதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
    • மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

    விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற் கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்"-எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.

    அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட் டிற்கு வருகை தந்து பயிற்சி கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள் ளார்.

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல்-(sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • அரசுக்கு நலச் சங்கம் கோரிக்கை
    • புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்  நடந்தது.

    சங்க தலைவர் காரத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், கோகுல்காந்தி. வீரபாரதி, பாலுசாமி, அருள்ஜோதி, பிரகதீஸ்வரர், சுரேஷ், கோடீஸ்வரன் சுப்ரமணி, இருதயராஜ் ஜில் முன்னிலை வகித்தனர். சதீஷ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    படஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    மேற்படிப்பு அரசு வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும். விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள்,  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நாளை 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 பிரிவுகளில் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கான சிலம்பம், கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வீரர், வீராங்கனைகள் விளையாட்டு ப்போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பேருந்தினை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
    • புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர்.
    • 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார்.

    தென்காசி:

    ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர். இதில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியதர்ஷினி சீனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் ஸ்ட்ராங் வுமன் பட்டத்தையும் வென்றார். 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார். 83 கிலோ எடை பிரிவில் தங்க மணிகண்டன் இரண்டு தங்கம் வென்றார்.

    66 கிலோ மாஸ்டர் 2 எடை பிரிவில் சுப்ரமணியன் இரண்டு தங்கம் வென்றார். 93 கிலோ மாஸ்டர் 3 எடை பிரிவில் மனசாட்சி ராஜேந்திரன், ஜூனியர் பிரிவில் முகமது லால், சீனியர் பிரிவில் கோச் ராம்சங்கர் இரண்டு தங்கப்பதக்கம் வென்றனர். அதே பிரிவில் ஹரிஹர சுப்ரமணியன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 105 கிலோ எடை பிரிவில் முத்துராஜா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 120 கிலோ எடைப்பிரிவில் செந்தில் ஆறுமுகம் இரண்டு தங்கம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் மாநில அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம்.
    • இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில்விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    • ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் மேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சி ற ப் பு விருந்தினராக வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வாலிபால், கேரம், கிரிக்கெ ட், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி செயலாளர் சதீஷ் குமார், பா.ஜனதா .பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந் திரன் மற்றும் அய்யனார் கோவில் மேடு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தலைவர் நாகராஜன் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி, சத்தியா ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    தேசிய அளவில் பதக்கம் வெல்லும் புதுவை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்று புதுவை ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி வீதியில் உள்ள ஒட்டல் செண்பகாவில் நடந்தது. ஒலிம்பிக் சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வேல்முருகன், வாழ்நாள் தலைவர் பூங்காவனம், மூத்த துணை தலைவர் உதயகுமார், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், ஜெயராஜ், பொருளாளர் சுப்ரமணி, இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி, ஸ்டாலின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் ஊழியர்களுக்கு 8 மாத காலமாக சம்பளம் கொடுக்காமலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டு சங்கங்களுக்கு 2012 முதல் நிதி ஏதும் கொடுக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    பல ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசு வழங்கப்படவில்லை. இதனை அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதிய விளையாட்டு சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநில விளையாட்டு குழு மத்திடம் அங்கீகாரம் கோரியும் அங்கீகாரம் தராமல், அவர்களுக்கு வேண்டிய சங்கங்களுக்கு மட்டும் புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அங்கீகாரம் கொடுத்து உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    விளையாட்டின் மீது அக்கறையே செலுத்தாமல் விளையாட்டு சங்கங்களுக்கு சரியான நிதி கொடுக்காமல் அனுபவமிக்க உறுப்பினர் செயலாளரை கொண்ட புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இது குறித்து முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் துணை தலைவர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    நாகை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.

    விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.



    ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    ×