search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil scholars"

    • சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
    • வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.

    சென்னை:

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா சென்னையில் நடந் தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வி.ஜி.பி. ரவிதாஸ் வரவேற்றார்.

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபா நாயகர் அப்பாவு வெளியிட்டார். மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது, அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல் முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஆண்டாள் பிரியதர்ஷினி, உள்பட 30 தமிழறிஞர்களுக்கு விஜிபி இலக்கிய விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வி.ஜி.சந்தோசம் சென்னையை சேர்ந்தவர் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல. நான், வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோசம் எல்லோருமே நெல்லையில் பிறந்து வளர்ந்து தாமிரபரணி தண்ணீரை பருகி, அதன்பிறகு சென்னையில் அடையாளத்தை கண்டவர்கள். தினத்தந்தியை எடுத்துக்கொண்டால் சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பாரதியார், வ.உ.சிதம்பரனார் எல்லோருமே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

    வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்து ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் மூலம் சாமானிய வீட்டு பிள்ளையும் சர்வதேச தரத்துக்கு இணையான தரமான கல்வி கற்க முடியும். அதேபோல் தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வெளிநாடுகளில் கடனாக வாங்கி இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை விளைவித்து நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவு கொடுக்காவிட்டால் நம்மால் வாழ முடியாது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 'விஜிபி தமிழ்ச்சங்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் தமிழனாக பிறந்தேன். எனவே தான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். அதற்காக திருவள்ளுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதன் மூலம் தமிழை வளர்த்து வருகிறேன்' என்றார்.

    விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. முடிவில் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார். உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.

    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
    • மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ந்தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப் பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

    மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

    கள்ளக்குறிச்சி::

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

    மேலும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவ லகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாராங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்று க்கொள்ள ப்படமாட்டாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவி த்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 ஆக மொத்தம் ரூ.4 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
    • மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 - 23ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி செய்ததற்கான ஆதாரம் மற்றும் தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

    இதற்காக, www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்ட தமிழ் அறிஞர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 608 ல் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரம் அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
    • உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.

    திருப்பூர் :

    தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் தமிழறிஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4 ஆயிரம் அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஞா.நெல்சன், இடுவம்பாளையத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.முன்னதாக இருவருக்கும் பொன்னாடை அணிவித்து மாவட்ட கலெக்டர் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×