

திருப்பூர் :
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் தமிழறிஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4 ஆயிரம் அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஞா.நெல்சன், இடுவம்பாளையத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.முன்னதாக இருவருக்கும் பொன்னாடை அணிவித்து மாவட்ட கலெக்டர் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.