என் மலர்
நீங்கள் தேடியது "Literary Award"
- உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
- உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் "செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு குறித்து அவர் அறிவித்தார்.
இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 7 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் ஹிந்தி, உருது மொழி இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியை இணைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவிமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்குச் செம்மொழி இலக்கிய விருது ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
இந்தப் பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.
உருது மொழி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாகச் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. உருது மொழியின் பல பிரபல முஸ்லிமல்லாத எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளனர். எடுத்துக்காட்டாக பிரேம்சந்த் உடைய கதைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது பிராக் கவுரக்பூரி உடைய கஸல்களும் மிகவும் பிரபலமானதாக உள்ளது
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வரும் வரை சுமார் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த முகலாயர்களின் ஆட்சி மொழி. பாரசீக மொழி அதனோடு அரபு மொழி கலந்து அதுவே காலப்போக்கில் உருது மொழியாக உருவெடுத்தது.
ஹிந்தி மொழிக்கும் உருது மொழிக்கும் உள்ள வித்தியாசம், ஹிந்தி மொழி பாரசீக மொழியோடு சமஸ்கிருதத்தை கலந்ததாக இருக்கிறது, உருதுமொழி பாரசீக மொழியோடு அரபி மொழி கலந்ததாக இருக்கிறது.
உருது மொழி பாரசீக மற்றும் அரபி இலக்கணம் மற்றும் எழுத்து வடிவங்களைக் கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுத்து வடிவத்தை இலக்கணத்தைக் கொண்டது.
இந்தியா முழுவதும் உள்ள மக்களால் பேசப்படும் மொழிகளில் உருது மொழி ஐந்தாவது பெரிய மொழியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு இருக்கிறார்கள்.
ஹிந்தி திரைப்படங்களில் உள்ள வசனங்கள் மட்டுமே ஹிந்தி மொழியில் இருக்கிறது, பாடல்கள் அனைத்தும் உருது மொழியிலேயே அமைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அன்று முதல் இன்று வரை இந்துஸ்தானி இசை, கஜல் இசை, கவாலி இசை போன்ற இசைகள் உருது மொழியினால் தான் உருவாகியிருக்கிறது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் உருது மொழி இடம் பெற்று இருப்பதும் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அரசின் அதிகாரப் பூர்வமான மொழியாகவே உருது மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே உருது மொழியின் தனிச் சிறப்புத் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு செம்மொழி இலக்கிய விருது பட்டியலில் உருது மொழியையும் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
- வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.
சென்னை:
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா சென்னையில் நடந் தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வி.ஜி.பி. ரவிதாஸ் வரவேற்றார்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபா நாயகர் அப்பாவு வெளியிட்டார். மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார்.
விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது, அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல் முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஆண்டாள் பிரியதர்ஷினி, உள்பட 30 தமிழறிஞர்களுக்கு விஜிபி இலக்கிய விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வி.ஜி.சந்தோசம் சென்னையை சேர்ந்தவர் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல. நான், வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோசம் எல்லோருமே நெல்லையில் பிறந்து வளர்ந்து தாமிரபரணி தண்ணீரை பருகி, அதன்பிறகு சென்னையில் அடையாளத்தை கண்டவர்கள். தினத்தந்தியை எடுத்துக்கொண்டால் சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பாரதியார், வ.உ.சிதம்பரனார் எல்லோருமே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.
வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்து ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் மூலம் சாமானிய வீட்டு பிள்ளையும் சர்வதேச தரத்துக்கு இணையான தரமான கல்வி கற்க முடியும். அதேபோல் தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க இருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வெளிநாடுகளில் கடனாக வாங்கி இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை விளைவித்து நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவு கொடுக்காவிட்டால் நம்மால் வாழ முடியாது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 'விஜிபி தமிழ்ச்சங்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் தமிழனாக பிறந்தேன். எனவே தான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். அதற்காக திருவள்ளுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதன் மூலம் தமிழை வளர்த்து வருகிறேன்' என்றார்.
விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. முடிவில் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார். உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.






