வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 - 23ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி செய்ததற்கான ஆதாரம் மற்றும் தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

இதற்காக, www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட தமிழ் அறிஞர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 608 ல் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com