என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
    • 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

    மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்:-

    கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.

    ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

    ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.

    'P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

    தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.

    இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.

    நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.

    சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.

    சென்னை:

    சி.பா.ஆதித்தனாரின் 44-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது வருந்ததக்க விஷயம்.

    இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்கு பெருமை தான்.

    மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள முதல்-மந்திரியும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்-மந்திரியும் எனது அன்புத் தோழருமான பினராயி விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு-கேரள உறவினை வலுப்படுத்துகின்றன. நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி முனைவர் ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தலைமை தாங்கி நூலை வெளியிட்டார்.

    முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தி.மு.க. பற்றி உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பற்றி பேசினார்.

    அவர் கடந்த 2014 முதல் அப்படித்தான் பேசி வருகிறார். பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு தான் உள்ளது. வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். முதலமைச்சர் எப்போதும் நேருக்கு நேராக தான் பேசுவார். துணிந்து தனது கருத்தை தெரிவிப்பார். சிலரைப் போல் கைகட்டி நிற்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது.
    • எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

    மாநிலத்தின் நிதியை கேட்டு பெறுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பண்ணத்தான் செய்வார். ED-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தொடர்ந்து பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    மிரட்டி அடி பணிய வைக்க பார்த்தார்கள். பயப்படுவதற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்குன கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கைகள் உடைய கட்சி. தவறு செய்பவர்கள் தான் பயப்படணும். நாங்கள் யாருக்கும் அடிபணியணும், பயப்படணும்னு அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றார். 

    • மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
    • நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

    நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

    இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை 4.30 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மாலை 6.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

    • டெல்லியில் நாளை நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தின் இடைவேளையின்போது பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என தகவல்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் நாளை நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது

    நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார்.

    இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பிரதமர் மோடியை நாளை மாலை 4.10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தின் இடைவேளையின்போது பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.

    டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.

    இதனைத் தொடர்ந்து, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

    • பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் சந்திப்பு.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.

    இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சோனியா, ராகுல் உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் சந்திப்பு.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.

    டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.

    • கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
    • நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

    இதற்காக அவர் இன்று காலை 9.50 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு, பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா, அறிவாலயம் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புழல் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

    பகல் 1.15 மணியளவில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் மேளதாளங்கள் முழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு தங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குமாறு பேச உள்ளார்.

    தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை தருமாறு வலியுறுத்துவதுடன் பேரிடர் நிவாரண நிதி, திட்டங்களுக்கான கூடுதல் நிதி கேட்டும் வற்புறுத்துவார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழ கத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை இன்று மாலை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே போல் நாளை நிதி ஆயோக் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால் அங்குள்ள கூட்ட அரங்கில் நேரம் கிடைக்கும் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அது மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



    • சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது.
    • இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், வருகிற ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

    அதற்கு முதல் நாளான மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இந்த ரோடு ஷோ மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்ரத் புரம், காளவாசல், குரு தியேட்டர், திருமலை நாயக்கர் சிலை வழியாக நடைபெற்று தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும். அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய மதுரையின் பத்து தொகுதியின் வெற்றிக்கு அடித்தளமாகவும், தேர்தல் வியூகமாகவும் இந்த ரோடு ஷோ அமையும் அளவிற்கு நமது தொண்டர்கள் அணி திரண்டு வர வேண்டும். தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், அரசியலுக்கு தலைநகரம் மதுரை என்று சொல்லுகின்ற அளவிற்கு பல மாற்றங்களை நமது மதுரை கண்டு இருக்கிறது.

    இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நமது கட்சியின் மாநாடு மாபெரும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது. அதேபோல் ஒரே நாளில் மேலூர் டங்ஸ்டன் வெற்றி மாநாடு அமைந்திருந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×