என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ED raid"
- திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர்.
- தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம், உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு 2 கார்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் சென்று ரத்தினம் உள்ளாரா? என கேட்டனர். அவர் நேற்று இரவு வெளியூர் சென்று விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையை முன்னிட்டு அவரது வீட்டுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டனர். ஏற்கனவே அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நடந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்த நிலையில் தற்போது எத்தனை நாட்கள் சோதனை தொடரும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
- இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.
- துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.
இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.
இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர்.
- மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியதால், டிரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் ரத்து செய்து திரும்பினர்.
இந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இவற்றை டிரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று சோதனை நடத்த முடியாமல் போன மருவூர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் குவாரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 மணல் குவாரிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
- அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர்.
- துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இன்று காலை அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அவர்கள், அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.
இதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வல்லுனர்களையும் அவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் இந்த மணல் குவாரி மூடப்பட்டது, தடையை மீறி யாரும் மணல் அள்ளாமல் இருப்பதற்காக, அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் மணல் அள்ளியதாக அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் சென்றது.
இதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை காரணமாக கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார்.
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
- கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் ரூ300 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக குற்றப்பிரிவுபோலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அமலாக்கத் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த இந்த மோசடி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனின் மந்திரி சபையில் இருந்த, தற்போதைய எம்.எல்.ஏ. மொய்தீன், வடக்கஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் அரவிந்தாஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணையின் போது தன்னை அமலாக்கத் துறையினர் தாக்கியதாக அரவிந்தாஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் அரவிந்தாஷனை வடக்கஞ்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
- தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரியல்-எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தி.நகரில் ரியல்-எஸ்டேட் அதிபர் ஒருவரின் வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தி.நகர் சரவணா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையை சேர்ந்த இவர் ரியல்-எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் ஆவார். இதை தொடர்ந்து ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதேபோன்று தஞ்சையில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
30 இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரியல்-எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்த அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.
இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்று வருகிறது. ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முதலீடு தொடர்பாக முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சில நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை தொடர்ந்தே சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை முடிவில்தான் ரியல்-எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் என்னென்ன? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.
- நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
- 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொடர்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.
இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவராயன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ராமச்சந்திரனின் அலுவலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்றவர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.
இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அமலாக்கத்து றை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.