என் மலர்
நீங்கள் தேடியது "ED Raid"
- கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தது.
- மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையை நடைபெற்ற இடங்களில் மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணி நடைபெற்றது. இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.
- மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
- இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
கொல்கத்தா:
மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அர்பிதாவின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இதுஒருபுறமிருக்க தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை கொல்கத்தா பேங்ஷால் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதேபோல் விசாரணை வளையத்தில் உள்ள அர்பிதாவையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலை போல் குவிக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு கட்டுக்கள்.
- வங்கி ஊழியர்கள் உதவியுடன் ரு.20 கோடி பணத்தை எண்ணிய அதிகாரிகள்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் தொடக்கக் கல்வி வாரியம் ஆகியவற்றில் ஆள் சேர்ப்பில் பெரும் அளவு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆரம்ப, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அம்மாநில பாஜகவும் குற்றம் சாட்டி இருந்தது.

இந்நிலையில் அம்மாநிலத்தின் தற்போதைய வர்த்தகத்துறை அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அர்பிதா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் உதவி நாடப்பட்டது. பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் அந்த பணம் மொத்தம் 20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆவணங்கள், பதிவுகள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின. அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பெரும் அளவில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்த விசாரணையில் தொடர்புடையவர்களே என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.






