search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED raid"

    • தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
    • குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சென்னை மாநகரை குறி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலரை குறி வைத்து அவர்களது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக விரைவில் பெரிய அளவிலான மெகா சோதனையை நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனையை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேர்தல் நேரத்தில் இது போன்ற சோதனைகளை நடத்துவதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அவ்வப்போது நடைபெறும் அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளே பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் பெரிய அளவில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை நடத்தினால் அது தேர்தல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எப்போதுமே சோதனைகள் என்பது ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்படுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை. இதற்கு முன்பும் பலமுறை ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சோதனை என்பது நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே ஒவ்வொரு முறையும் திடீரென சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்
    • இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.

    இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.

    விஜய பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக சார்பில் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    • சைதாப்பேட்டையில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இன்று 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் மற்றும் ஐ.டி. நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை தரமணியில் உள்ள ஐ.டி. வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 7.10 மணிக்கு அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

    கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் பாலா என்பவருக்கு சென்னை நீலாங்கரையில் உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் சைதாப்பேட்டையில் இந்த கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் வைர கணேஷ் என்பவரின் வீடு புது வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரபல கட்டுமான நிறுவனம் தமிழகம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் இடத்தை வாங்கி குடியிருப்பு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.

    இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் 2021-ம் ஆண்டு இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னை, மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். அப்போது வீட்டில் விஜயபாஸ்கரின் பெற்றோர் சின்னத்தம்பி, அம்மாக்கண்ணு ஆகியோர் இருந்தனர்.

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப்பணி தொடர்பாக சென்னையில் உள்ளார். இதை தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே 2021-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.

    ஊழல் தடுப்பு போலீசார் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலுப்பூரில் உள்ள வீடு உட்பட அவரது தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு ஆணங்களையும் பறிமுதல் செய்தனர்.

     

    அமலாக்கத்துறையினர் வந்த கார்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள காட்சி - முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டு முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க.வினர்.

    அமலாக்கத்துறையினர் வந்த கார்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள காட்சி - முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டு முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க.வினர்.

    செப்டம்பர் மாதம் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.நகர், முகப்பேர், கொளத்தூர், அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

    தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    12 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சோதனைக்குள்ளாகி இருக்கும் தனியார் நிறுவனத்தின் அதிபர் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்றும் அவர் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

    இதேபோன்று பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வி.சி.க துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
    • ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது.

    இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.

    என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.

    இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
    • ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் சப்ளை செய்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் புறப்பட்டுச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
    • நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    சென்னை:

    மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அதன் கிளை நிறுவனங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்பட பல நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை முதல் இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள ஐ.டி.எல். நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனை முடிந்த பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதி பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள்.
    • டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் சேர அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

    INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு CBI நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என மிரட்டல் விடுக்கிறார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு செய்யும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என மிரட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கு பயப்படமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை 6 சம்மன்களை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன .டெல்லியில் உள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
    • செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×