என் மலர்
நீங்கள் தேடியது "அமித் ஷா"
- மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
- மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகில் உள்ள மகேஷ்வரி சமூகத்தினர் ஒன்று கூடிய மகேஷ்வரி உலக மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
இந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:-
வீட்டில் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசினால், அவர்கள் தானாகவே அவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய மாநிலமான ராஜஸ்தானுடன் இணைக்கப்படுவார்கள். மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
மற்ற இடங்களில் தேவைப்படும்போது எந்த மொழியையும் பேசலாம். வெளிநாட்டு மொழிகளை கூட பேசிலாம். ஆனால், வீட்டில் குழந்தைகளுடன் தாய் மொழியில்தான் பேச வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- "வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
- அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.
மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடினர்.
மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்தச் சோதனையைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் டெல்லியில் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாகத் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி-க்களை டெல்லி போலீசார் அவர்களை குண்டுக்கட்டதாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
"மத்திய உள்துறை அமைச்சகம் அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி எங்களது கட்சியின் அரசியல் ரகசியங்களையும், தேர்தல் வியூகங்களையும் திருட முயற்சிக்கிறது.
மம்தா பானர்ஜி ஒரு பெண் சிங்கம், அவர் தனது கட்சியையும் மக்களையும் பாதுகாப்பார்" என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது என்று மம்தா பானர்ஜி சாடினார்.
- பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்
- புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்"
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது. கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார் .
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார். அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள். சோதனையின்போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் அவர் சாடினார். மேலும் "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1905-ம் ஆண்டில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது. பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.
- பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் அறிவித்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல் கொடுக்கப்படவில்லை. 3000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என நம்புகிறீர்களா..?
எங்களது திட்டங்களை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துவிட்டன. தமிழகத்தில் நாங்கள் அமித் ஷாவை மண்ணை கவ்வ வைப்போம்,
உதயநிதியை முதலமைச்சர் என்று எப்போதும் நாங்கள் சொல்லவில்லை. துணை முதலமைச்சர் என்றுதான் கூறி வருகிறோம்.
இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராக வரலாம். தேர்தல் பணிக்காக அவர் இன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்கிற தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர்தான் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதி.
அமித் ஷா மேடை ஏறுவதற்கு தாமதமாவதற்கு கூட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் கிடையாது. பா.ஜ.க. பருப்பு தமிழகத்தில் வேகாது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதலில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தான் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அமித் ஷா சொல்வதை கூட்டணி கட்சிகளிடமே நடக்கவில்லை. அப்புறம் எங்கு வெளியே நடப்பது.
தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுவது தான் வேடிக்கையானது.
காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது எங்கள் பிரச்சனையாகாது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிக பலமாக உள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியே செல்லாது . மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்களுடைய வெற்றி தெளிவாக உள்ளது தைரியமாக நாங்கள் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படக்கூடிய அவசியம் கிடையாது. எங்களுக்கு அடுத்தது யார் என்பது தான் தற்போது பிரச்சனை.
முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் எந்த எதிர்மறை கருத்துக்களும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். எந்த 90 நாட்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார் அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட அவசியமில்லை.
தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருகிறார்கள் என்று நேற்று அமித் ஷா கூறியுள்ளார். நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை.
தி.மு.க. மீது எதையாவது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் சம்பந்தம் உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார் . இது அவருடைய கண்டுபிடிப்பு. எங்கள் மீது பழி போட முடியாது.
தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதியை தான் மத்திய அரசு ஒதுக்கியது. எங்களுக்கு சிறப்பு நிதி எதுவும் வரவில்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம்.
மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
காங்கிரஸ் வெளியேறப் போகிறது என்று எடப்பாடி பகல் கனவு கண்டு வருகிறார். தி.மு.க.வை குறை கூற எடப்பாடிக்கு ஒரு சதவீதம் கூட தகுதி கிடையாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின்போது உடன் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத்அலி இருந்தனர்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித்ஷா ஆலோசனை.
- கூட்டத்தில் திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பின்னர், அங்கு திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
விழாவிற்கு பிறகு, திருச்சியில் தங்கியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாக அமித் ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல்
மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள்.
- ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இன்று அசாமில் 5 ஆயிரம் பேர் இருக்கும் வகையிலான மிகப்பெரிய ஆடிட்டோரியத்தை திறந்து வைத்தார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது:-
அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் நடைபெறும் தேர்தலில், ஊடுருவலை அனுமிக்காத, அசாம் வளர்ச்சிக்கான பணிக்கான அரசை தேர்ந்தெடுங்கள். அசாமில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கீழ் பெரும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. பாஜக அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள். ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
வாக்கு வங்கிக்காக, இன்று அசாம் அடையாளத்திற்கு மிரட்டலாக இருக்கும் ஊடுருவலை காங்கிரஸ் ஊக்குவித்தது. மாநிலத்தில் கலாச்சாரம், பொருளாதர மறுமலர்ச்சிக்காக பாஜக தலைமையிலான அரசு தற்போது பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
- ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கிராம மக்கள் வாழும் நிலத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாத்தின்போது, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம், ஒவ்வொரு முறையும் தன்னுடைய கட்சி தேர்தலில் ஏன் தோல்வியடைகிறது என என்னிடம் விசித்திரமான கேள்வியை கேட்டார். மக்களிடம் கேட்பதற்குப் பதில் என்னிடம் கேட்டார். ராகுல் பாபா, நான் இங்கு தொடங்கியுள்ள இந்த இரண்டு முயற்சிகளை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.
தோல்விக்காக ராகுல் காந்தி காந்தி சோர்வு அடையக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் தோல்வியடைய இருக்கிறது.
எங்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள காரணம், மக்கள் எங்களுடைய கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ராமர் கோவில், பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக பிரசாரம் ஆகியவற்றை எதிர்த்தது.
மக்கள் விரும்புவதை, நீங்கள் எதிர்த்தால், நீங்கள் எப்படி வாக்குகளை பெறுவீர்கள்? என்பதை எனக்கு சொல்லுங்கள்.
ஆனால், இத்தகைய ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
- சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார்.
- சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஒரு நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்வில் சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்தில் (DBRAIT) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அமித் ஷா, அங்கு, சாவர்க்கருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைப்பார்.
இறுதிப் பயணத் திட்டம் விரைவில் கிடைக்கும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
- அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்
மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.
தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.
இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.
நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.
ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
- செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.
இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
- இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
- அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.
தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை.
இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.
அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்






