என் மலர்
இந்தியா

சமூகம், கலாச்சாரம், மதத்தை பாதுகாப்பதற்கு மொழி மிக முக்கியமானது: அமித் ஷா
- மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
- மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகில் உள்ள மகேஷ்வரி சமூகத்தினர் ஒன்று கூடிய மகேஷ்வரி உலக மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
இந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:-
வீட்டில் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசினால், அவர்கள் தானாகவே அவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய மாநிலமான ராஜஸ்தானுடன் இணைக்கப்படுவார்கள். மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.
மற்ற இடங்களில் தேவைப்படும்போது எந்த மொழியையும் பேசலாம். வெளிநாட்டு மொழிகளை கூட பேசிலாம். ஆனால், வீட்டில் குழந்தைகளுடன் தாய் மொழியில்தான் பேச வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Next Story






