என் மலர்
நீங்கள் தேடியது "Amit Shah"
- பாராளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது.
- மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதில் மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி.க்களும் அடங்குவர்.
இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாக கூறினார்.
இதுபற்றி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்" என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நடந்த 'வந்தே மாதரம்' விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஏன் 'வந்தே மாதர'த்தை நினைவுகூருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு 'வந்தே மாதரம்' மீதான காதல் ஒருநாள் மட்டும்தான்.
மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகிறது. இருப்பினும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஊழல் மந்திரிகளை பாதுகாக்கும் ஒரு "கவச பாதுகாப்பு" இலாகாவை முதல்-மந்திரி தொடங்கி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையெழுத்து
- வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த செயல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர். அதில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையொமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா, நீதிபதிக்கு எதிரான இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றும், தங்களது வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார்.
- சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார்.
- சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஒரு நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்வில் சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்தில் (DBRAIT) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அமித் ஷா, அங்கு, சாவர்க்கருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைப்பார்.
இறுதிப் பயணத் திட்டம் விரைவில் கிடைக்கும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
- அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்
மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.
தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.
இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.
நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.
ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
- செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பின் பாஜக ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் சசிகலா, தினகரன் ஆகியிருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் செங்கோட்டையன் அண்மையில் அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்தார்.
இந்த சூழலில் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில் ஓபிஎஸ் டெல்லி பயணப்பட்டுள்ளார். அங்கு பாஜகவின் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். இந்த சந்திப்பின் பின் சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
- இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
- அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.
தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை.
இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.
அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்
- சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது.
- இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 60-வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:
அடுத்த டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டிற்கு முன் இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும்.
நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014ல் 126ஆக இருந்தது. இன்று அது வெறும் 11 ஆக குறைந்துள்ளது.
உளவுத்துறை செயல்பாட்டால் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மூளையாக இருப்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
- கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
- தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.
இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
- இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA அறிவித்தது.
- பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அரியானாவில் நேற்று நடைபெற்ற வடக்குமண்டல கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "டெல்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்'' என்று தெரிவித்தார்.
- காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
- மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் காயமடைந்தர்வகளை நேரில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, இன்று மாலை சுமார் 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஒரு ஹூண்டாய் ஐ20 காரில் வெடிப்பு ஏற்பட்டது.
இந்த வெடிப்பின் காரணமாக, 3-4 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மக்கள் காயமடைந்தனர். மருத்துவமனை வட்டாரங்களின்படி, இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் அனைத்து கோணங்களிலும், முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். வெடிப்புச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புப் குழு, மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.
எங்கள் முகமைகள் குறுகிய காலத்திற்குள் வெடிப்புக்கான காரணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.
வெடிப்புச் செய்தி கிடைத்தவுடன் உடனடியாக எனக்கு பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு, நான் பிரதமருக்கும் விளக்கமளித்தேன்.
நான் இங்கிருந்து சம்பவ இடத்தைப் பார்வையிடச் செல்கிறேன், மேலும் நாளை காலை, உள்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகள் குழுவுடன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்" என்று விளக்கம் அளித்தார்.
- NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் குறித்து மாநில காவல் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் உளவுத்துறை தலைமை அதிகாரியுடனும் நிலைமை குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.






