என் மலர்
இந்தியா

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி
- தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தலைநகர் டெல்லி சென்றார்.
புதுடெல்லி:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை மந்திரி அமித் ஷாவைச் சந்தித்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்றுள்ள நிலையில் பழனிசாமியும் சென்றுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், கூட்டணியில் மேலும் சிலரை இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






