search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamta Banerjee"

    • தொழில் துறையை மேம்படுத்த மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு நடைபெற்றது
    • தான் பட்ட துன்பங்களை குறித்து மம்தா உரை ஆற்ற வேண்டும் என்றார் மிச்சி

    இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்து தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அங்கு உலக வர்த்தக சந்திப்பு நடைபெறுகிறது.

    நேற்று, மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பில் (Bengal Global Business Summit) மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஆக்ஸ்போர்டு துணைவேந்தரும் (pro-vice-chancellor) அறிவுசார் பரிமாற்ற துறையின் பேராசிரியருமான ஜொனாதன் மிச்சியை (Jonathan Michie) உரையாற்ற அழைத்தார்.

    அப்போது ஜொனாதன் மிச்சி தெரிவித்ததாவது:

    இனவெறிக்கு எதிராகவும் சமூக அமைதியை நிலைநாட்டவும் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் எங்களை நெகிழ செய்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம், எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்து தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களையும், போராட்டங்களையும், அதை தாண்டிய அவரது சாதனைகளையும் குறித்து உரையாற்ற அழைத்தோம். ஆக்ஸ்போர்டில் இந்தியர்கள் பலர் கல்வி பயில்வதால், மம்தாவின் உரை எங்கள் மாணவ மாணவியர்களாலும், பேராசிரியர்களாலும் மிகவும் விரும்பப்படும். எங்கள் அழைப்பை அவர் ஏற்று கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிச்சி கூறினார்.

    தென்மேற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பிராந்தியத்தில் உள்ளது ஆக்ஸ்போர்டு (Oxford) நகரம். உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இந்நகரத்தில் உள்ளது. தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம், 900 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளுக்காக 70 துறைகள் அங்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
    • தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

    மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.

    இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.

    இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MamtaBanerjee
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ. முயற்சியை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நேரடியாக தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்தின் மீது சம்மட்டியால் அடித்தது போல் இருக்கிறது.

    மம்தாபானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். 1972-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளானார்கள். பல கஷ்டங்கள் பட்டோம் என்று அவர்களே கூறியுள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசோடு சேர்ந்து தி.மு.க. கருத்து சொல்லி வருகிறது.

    பிரதமர் மோடி மாநிலங்களுக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது.

    மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், ஓய்வூதிய திட்டம், வரிவிலக்கு, ஊரக வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற ஒரு பட்ஜெட். இதை யாரும் குறை சொல்ல முடியாது.

    காங்கிரசில் வறுமை ஒழிப்பு திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது அவர்களுக்குத்தான். அவர்களுடைய வறுமையை ஒழிக்கத்தான் பல ஊழல்கள் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #MamtaBanerjee

    ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது. #AndhraPradesh #WestBengal #MamtaBanerjee #CBI
    கொல்கத்தா:

    ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது. #AndhraPradesh #WestBengal #MamtaBanerjee #CBI

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்ற சதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார் 187 பிரிவுகள் மற்றும் 67 மத்திய அரசு சட்டங்களின் படி பொது அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன.



    இதன் மூலம் குற்ற வழக்குகளின் விசாரணைக்காக மாநில அரசுகளின் பிரத்யேக அனுமதி இன்றி அந்தந்த மாநிலங்களில் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

    ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் நடவடிக்கையாக, சி.பி.ஐ.க்கு வழங்கியுள்ள பொது அனுமதியை திரும்ப பெறுவதாக ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. போன்ற உயர் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது.

    இந்த நடவடிக்கை மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆந்திராவுக்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. அதேநேரம் கோர்ட்டு உத்தரவு மூலம் நடத்தப்படும் விசாரணை மற்றும் சோதனைகளுக்கு மாநில அரசிடம் தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

    ஆந்திராவின் இந்த முடிவை தொடர்ந்து மேற்கு வங்காள அரசும் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு உள்ள பொது அனுமதியை நேற்று திரும்ப பெற்றது. கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிகச்சரியானது. சி.பி.ஐ. மற்றும் பிற விசாரணை நிறுவனங்களை பா.ஜனதா தனது அரசியல் நலன்களுக்காகவும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

    ஆனால் மேற்கு வங்காள அரசின் இந்த நடவடிக்கை மூலம் அந்த மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சாரதா, நரதா போன்ற ஊழல் வழக்குகளில் நடந்து வரும் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என சி.பி.ஐ. அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் இந்த வழக்குகளில் எந்தவித கோர்ட்டு உத்தரவும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளின் இந்த முடிவுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஊழல் விவகாரத்தில், எந்த மாநிலத்துக்கும் எந்தவொரு இறையாண்மையும் இல்லை. மறைப்பதற்கு தங்களிடம் ஏராளமான விஷயங்கள் இருப்பதால்தான், இந்த மாநில அரசுகள் சி.பி.ஐ. அமைப்பை தங்கள் மாநிலத்துக் குள் அனுமதிக்க மறுக்கின்றன’ என்று குற்றம் சாட்டினார். #AndhraPradesh #WestBengal #MamtaBanerjee #CBI  
    கேரள மாநிலத்தை சின்னாபின்னப்படுத்தியுள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #KeralaFloods
    கொல்கத்தா:

    கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

    மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.  காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த பேரிடரால் பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு தேவைப்படும் இதர உதவிகள் அனைத்தையும் செய்ய மேற்கு வங்காளம் மாநில அரசு தயாராக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மம்தா, கேரளாவில் வாழும் சகோதர, சகோதரிகளில் வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். #Mamataannounces #KeralaFloods
    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சியை வீழ்த்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் போவேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #CongTMCstand
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள  நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி, தொண்டர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் பிரசார பயணங்களில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஈடுபட்டு வருகிறார்.

    கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு என சில மாவட்டங்களின் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திய அவர் அடுத்தகட்டமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் சரிபாதியில் வெற்றி பெற்றே தீருவோம் என்ற சூளுரையுடன் கொல்கத்தா நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சியை வீழ்த்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இனிபோய் பிரசாரம் செய்வேன் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், ஷியாமா பிரசாத் முகர்ஜி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பிறந்த மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசு அமைக்காமல் இந்த 19 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்றதில் பெருமை இல்லை என நான் கருதுகிறேன். எனவே, இங்கே ஒருமுறை ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

    ரவீந்திரநாத் தாகூரின் சங்கீதம் கேட்ட இந்த மாநிலத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சப்தம் தான் கேட்கிறது.


    மம்தா தலைமையிலான இந்த அரசு துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட கூட அனுமதி அளிக்காமல் இந்து மக்களை வஞ்சித்துள்ளது, அடுத்தமுறையும் இது தொடர்ந்தால் மம்தா பானர்ஜியின் தலைமை செயலகத்தை நோக்கி நாங்கள் படை எடுப்போம். உரிய முறையில் அவருக்கு பதிலடி தருவோம்.

    அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பில் பெயர்கள் விடுபட்டுபோன 40 லட்சம் வெளிநாட்டினருக்கு ஆதரவாக குரல் எழுப்பிவரும் மம்தா பானர்ஜி, வெளிநாடுகளில் இருந்துவந்து அசாம் மாநிலத்தில் குடியேறிய மக்களின் ஓட்டுவங்கியை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்.

    சட்டவிரோதமாக இங்கு புகுந்த குடியேறிகள் முன்னர் இந்த மாநிலத்தை ஆட்சி செய்த இடதுசாரிகளை
    ஆதரித்தார்கள் என்பதற்காக 2005-ம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த மம்தா, தற்போது அவர்களின் ஓட்டுக்காக ஆதரவாக பேச தொடங்கியுள்ளார்.

    குடியேறிகள் பெருகியதால் இந்த மாநிலம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாறி விட்டது. இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம்.  எங்களுக்கு நாடுதான் முக்கியம். குடியேறிகளுடன் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் தொடர்பாக தங்களது நிலைப்பாடு என்ன? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுப்படுத்தியாக வேண்டும்.

    அசாம் குடிமக்கள் பட்டியலை நாங்கள் நிச்சயமாக அமைதியான முறையில் நிறைவேற்றியே தீருவோம். இந்த நாட்டுக்குள் ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றியே தீருவோம். மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி யார் வந்தாலும் இதை தடுத்து நிறுத்திவிட முடியாது.

    நாங்கள் இந்த மாநிலத்து மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மம்தா பானர்ஜியின் சூழ்ச்சி அரசியலைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த பொதுக்கூட்டத்துக்கு தடைபோட எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றை எல்லாம் முறியடித்து இந்த கூட்டம் இப்போது நடக்கின்றது.

    எனது பேச்சை மக்கள் நேரடியாக கேட்க முடியாத அளவுக்கு மாநிலம் முழுவதிலும் உள்ள தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு சிக்னல்களை மம்தா அரசு முடக்கி, குறைத்துள்ளது.

    ஆனாலும், இந்த பொதுக்கூட்டத்துக்காக வந்துள்ள மக்கள் கூட்டம் விரைவில் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படும் என்பதற்கான அத்தாட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை பா.ஜ.க. விரட்டி அடிக்கும். இதற்காக இந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சென்று பேசுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #AmitShah #CongTMCstand 
    ×